படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

பாபர் மசூதி








    • புதைக்கப்பட்ட நீதி..!

    • -அமீர் அப்பாஸ்.
       
      இடித்தாலும்
      வெடித்தாலும்..
      அவர்கள் கரசேவகர்கள்..!

      அதற்காக துடித்தாலும்
      தொழுதாலும்
      நாங்கள் பயங்கரவாதிகள்..!

      இடிக்கப்பட்ட மசூதி
      யாருக்கு சொந்தம்?
      இடித்தவனுக்கு சொந்தம்..!

      அயோத்தியில்
      நிலத்தைப் பறிகொடுத்தவனுக்கு
      ஒரு பங்கு..!
      ஆக்ரமிப்பாளனுக்கு இரண்டு பங்கு..!

      மதச்சார்பின்மைத் தேசத்தின்
      மகத்தான தீர்ப்பு..!



      இத்தனை நாளாய்
      எழுத்துப் பிழையாய்
      வாசித்திருக்கிறேன்..!
      உயர்நீதி மன்றம் அல்ல
      அது உயர்சாதி மன்றம்..!

      நீதிமன்றத் தீர்ப்பை
      அவமதிக்க கூடாது..!
      ஆனாலும்-
      நீதியை அவமதிக்கலாம்..!

      எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
      இந்த பூமி திருந்தாது
      ஏனெனில்
      இது இராமஜென்மபூமி




      பூணூல்கள்-
      பாம்பாகி கொத்துகிறது
      தடி கொண்டு அடிக்க
      தடுக்கிறது சட்டம்…!


      ஒரு முறை நீதி
      புதைக்கப்படும் போது
      ஆயிரம் அநீதிகள்
      விதைக்கப் படுகிறது..!

      ஒரு இரும்புக் கரம்
      நம்மை ஒடுக்கும் போது..
      ஒராயிரம் பயங்கரங்களாய்
      அது வெடிக்கக் கூடும்..!

      விதைத்தவர்கள் மறந்தாலும்
      அறுவடைக் காலம்
      அவர்களை மறப்பதில்லை..!

    • மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
      - ...

      நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

      தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி