படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

12 ஏப்., 2013

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம்


அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது. அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி
உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!

எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் ‘அதுவாக இடிந்துவிட்டது’ என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.

ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.

பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.

பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.
முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப் படுகின்றன.

இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.

கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.

ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத்
தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.
பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.

தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?
பாலபாரதி , MLA
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)
http://www.satyamargam.com/2067

6 ஏப்., 2013

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்!

னவரி 30, 1948. ஒரு வயதேயான சுதந்திர இந்தியாவின் நெஞ்சில் முதல் கூராணி அறையப்பட்ட இந்திய தேசியக் கருப்பு தினம். அஹிம்சாவதி என்று உலகமே கொண்டாடிய, சாமானிய இந்திய மக்களின் தலைவரை மூக்குக்கு முன்னால் கைத் துப்பாக்கியைக் காட்டி, கோரமாகப் படுகொலை செய்த நாள். சுதந்திர இந்தியாவின் மீது நடத்தப்பட்ட முதல் தீவிரவாதத் தாக்குதல்!

"பிர்லா மந்திரில் காந்தி, முஸல்மான் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்" என்ற காட்டுத்தீ வதந்தியாய் 'கட்ட'விழ்த்து விடப்பட்டு மிகப் பெரிய கலவரம் வெடிக்கும் சூழல். இதற்காக பாகிஸ்தான் மீது படையெடுக்கவேண்டும் என்று அன்றைய அத்வானிக் கூட்டம் இன்று போலவே கூக்குரலிட்டது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.என்.காட்கிலின் தந்தையான காகாசாஹிப் காட்கில், நேரில் பார்த்த சாட்சியத்தை வைத்து கொலைகாரன் கோட்சே கைது செய்யப்பட்டான். முஸ்லிம்களின் பெயரான 'இஸ்மாயில்' என்று பச்சை குத்திய, 'சுன்னத்' செய்யப்பட்ட முஸ்லிம் அடையாளத்துடன் பிடிபட்ட கோட்சே, பின்னர் தீவிரவாதக் கும்பலான 'ஹிந்து மஹாசபை'யின் உறுப்பினன் என்று விசாரணையில் அறியப்பட்டு தூக்கிலிடப்பட்டதும், ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் தடை செய்யப்பட்டதும் சரித்திரம்! இந்திய முஸ்லிம் சமூகத்தின்மேல் பெரும் பழி ஒன்று திட்டமிட்டுச் சுமத்தப்பட இருந்து, தவிர்க்கப்பட்ட முதல் நிகழ்வு.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

செப்டெம்பர் 8, 2006 வெள்ளிக்கிழமை. மஹாரஷ்ட்ராவின் நாசிக் மாவட்டத்திலுள்ள மலேகானில் தொழுகையிடத்திற்கு அருகே, ஜும்ஆவிற்குப் பின் நடந்த பயங்கரத் தொடர் குண்டு வெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். வடக்கில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஷஃபே பராஅத் நாள் அன்று என்பது கூடுதல் விஷேசம்.

அது போதாதா? இந்தியாவின் மொத்த ஊடகக் குழுமமும் இஸ்லாமியப் பெயர் தாங்கிய எல்லா அமைப்புகளையும் முறை வைத்து, குண்டு வெடிப்போடு தொடர்பு படுத்தி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு களிப்புற்றன. கோட்சேவின் திட்டம் போன்றே இங்கும் குண்டு வைத்தவர்கள் போட்டுக் கொண்ட வேஷம் முஸ்லிம்களின் தோற்றத்தை ஒத்திருந்தது. விசாரணை எனும் பெயரில் தொடக்கமாகப் பதினொரு முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஐந்து வருடங்களாக மீண்டும் மீண்டும் 'புலன்விசாரணை' செய்து களைத்துப் போன பிறகு, அவர்கள் அனைவரும் 'நிரபராதிகள்' என்று கண்டறியப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். ஹேமந்த் கார்கரே என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியால், மிருகபலமான எதிர்ப்புகளைக் கடந்து, காவி தரித்த ஒரு சாமியாரிணி, ஒரு சாமியார், ஒரு ராணுவ அதிகாரி, உட்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள் சேவகர்கள் உண்மையான குற்றவாளிகளாகக நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். ஹேமந்த் கார்கரேயின் படுகொலை இன்னும் ஒரு புரியாத புதிராகத் தொடர்கிறது. இந்திய முஸ்லிம் சமூகத்தின்மேல் சுமத்தப்பட இருந்த மற்றுமொரு சதி!

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

மே 18, 2007 வியாழக்கிழமை. சரித்திரப்புகழ் வாய்ந்த சார்மினார் கோபுரத்திலிருந்து கூப்பிடு தூரமுள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலுக்குள் சக்திவாய்ந்த பைப் குண்டு வெடித்து பதினான்கு பேர் ஸ்தலத்திலேயே இறந்தார்கள். தொடர்ந்து, வழக்கம் போலவே அதுவரைக் கேள்விப்பட்டிராத இஸ்லாமியப் பெயர் தாங்கி இயக்கங்களின் பெயர்கள் ஊடகங்களில் அல்லோல கல்லோலப் படுகிறன்றன. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டுச் சிறைகளிலடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். எண்ணெய்க்கு வேண்டி உலகத்தை முட்டாளாக்கிய ஜார்ஜ் புஷ்ஷின் 'பேரழிவு' ஆயுதங்கள் போல, வெடிமருந்துகளும் ஜிஹாதி பிரசுரங்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டன. அத்தனையும் இட்டுக் கட்டப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள் என்பது பின்னாட்களில் எவ்வித ஐயமும் இன்றி நிரூபணம் ஆனது.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞருள் ஒருவனின் பணிவிடையால் மனம் திருந்திய சுவாமி அசீமானந்தா என்பவர் மாஜிஸ்டிரெட்டின் முன்பாக, தான் உட்பட சங் பரிவாரக் கும்பலின் விசுவாசிகள் யார் யாரெல்லாம் எப்படித் திட்டமிட்டு எங்கெல்லாம் குண்டு வெடிக்கச் செய்தோம் என்று அம்பலப் படுத்தினார்.

தேவேந்திரகுப்தா, லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்ரா, சுனில் ஜோஷி, நாபகுமார் சர்க்கார், ப்ரத் பாய், ராஜேந்திர சவுதிரி, தேஜாரம் ஆகிய காவித் தீவிரவாதிகள் உண்மையான குற்றவாளிகளாக தேசியப் புலனாய்வு ஏஜென்சியால் அறிவிக்கப்பட்டார்கள்.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

பிப்ரவரி 18, 2007. சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் - இல் அதே பார்முலாவிலான குண்டு வெடித்து 65 பேர் கொல்லப்பட்டனர். வழக்கம்போல புதியரக இஸ்லாமிய இயக்கங்களின் பெயர்களைச் சுட்டி விரல் நீட்டப்பட்டது. முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, பின்னர் புலன் விசாரணை செய்ததில் மேற்சொன்ன சுவாமி அசீமானந்தாதான் இந்தக் குண்டுவெடிப்பின் மூளை என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி டிசம்பர் 30, 2010 அன்று தெரிவித்தது. இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் காவிக்கும்பலின் இரு குற்றவாளிகளின் இருப்பிடத்தைப் பற்றி துப்புகொடுப்பவருக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய் பரிசறிவித்தது.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

ஜனுவரி 24, 2008. தமிழ்நாடு தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், தென்காசி பஸ்நிலையத்திலும் பைப் வெடிகுண்டு வெடிக்கிறது. உடனேயே குண்டுவைத்த 'முஸ்லிம் தீவிரவாதிகளை'க் கைது செய்யவேண்டும் என்று சங்க் பரிவாரம் ஊர்வலம் நடத்தி குற்றவாளிகளை ஊகிக்க வைக்கிறது. மற்ற மாநிலம் போலல்லாமல், அன்றைய போலீஸ் அதிகாரி டி.ஐ.ஜி கண்ணப்பன், தன் சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து, அந்தப் பழியை பழைய கோட்சே தந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள்மேல் போட முயன்ற காவிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரைக் குற்றவாளிகள் என்று கைது செய்கிறார்.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

பிப்ரவரி 21, 2013. ஹைதராபாத்தின் தில்சுக் நகரின் சந்தைத் தெருவில் இரண்டு குண்டுகள் வெடித்தன 17 பேர் கொல்லப்பட்டனர். குண்டுகள் வெடிக்கும்போது மட்டுமே பிரசவிக்கப்படும் இந்தியன் முஜாஹிதீனின் பெயர் மின்னாத தொலைக்காட்சி சேனலில்லை. வழக்கமான வழக்கப்படி, முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இப்போதும் வழக்கம்போல "அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்தோம்” என 'புலனாய்வு' எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று காவிக்கும்பல் பாதை காட்டியிருக்கிறது.

இப்படி இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்களின் மீது திட்டமிட்டே பரப்பப்படும் சதிவேலைகளுள் கண்ணுக்குத் தெரிந்தது கொஞ்சமே. இந்தக் கண்ணோட்டத்தில், "நாடாளுமன்றத் தாக்குதலின் உண்மைக் குற்றவாளிகள் யாரெனத் தெரியாமலேயே போய்விட்டது" என்கிறார் அருந்ததிராய். இந்தியன் முஜாஹிதீன் என்பது, சங்க் பரிவாரக் கும்பலான ஊடகத்துறையின் செல்லப்பிள்ளை என்கிறார் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்ட ஒரு சமுதாயத்தின்மீது திட்டமிட்டே நடத்தப்படும் சதியை அம்பலப் படுத்துவதும் முறியடிப்பதும் நம் சமுதாயத்தின் கடமையாகும்.

- ஆக்கம்: அபூ பிலால்

http://www.satyamargam.com/articles/series/research-articles/2076-saffron-terrorism.html

3 ஏப்., 2013

குடி கெடுக்கும் குடியரசுகள்

 அல்குர்ஆனின் வழியில் அறிவியல்……
 
இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான்,
“சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219
மது குடிப்பதால் சில பயனுண்டு என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கிவிலலாம் உயிருக்கு ஆபத்து.ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்று அல்லாஹ் தடை செய்கின்றான்.
உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகமும் இதையே கூறுகின்றது.( Mayo Foundation for Medical Education and Research )
“Alcohol may offer some health benefits, Especially for your heart. On the other hand, alcohol may increase your risk of health problems and damage your heart. Certainly, you do not have to drink any alcohol,and if you currently do not drink, and do not start drinking for the possible health benefits. In some cases, its safest to avoid alcohol entirely – the possible benefits do not outweigh the risks. ” ——www.mayoclinic.com/health/alcohol
  இறுதி உம்மத்திற்க்கு ஏன் இந்தத்தடை?
மனிதனுக்கு பெருமளவில் தீங்கிழைக்கும் மதுவை அல்லாஹ் ஏன் முன்பே தடை செய்யவில்லை? எல்லா நபிமார்கள் காலத்திலும் அனுமதிக்கப்பட்டதா? இல்லையா என்று நமக்குத் தெரியாது. ஒரு உம்மத்திற்கு தடை செய்த ஒன்றை மற்றொரு உம்மத்திக்கு அல்லாஹ் அனுமதிக்கலாம். உதாரணமாக யுதர்களுக்கு கொழுப்பு உண்பது ஹராம், ஆனால் நமக்கு ஹலால். இதுபோல்,பைபிள் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் பலர் மது அருந்தியதாக செய்திகள் உள்ளன. இதை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.மற்றபடி,.ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ் அனுமதித்த அல்லது தடை செய்த ஒன்றை ஏன்? எதற்க்கு என்று எவரும் அவனை கேள்வி கேட்கமுடியாது. கேள்வி கேட்க தகுதி உள்ளவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
” அவன் செய்பவைகளைப்பற்றி எவருமே அவனைக்கேட்க முடியாது.எனினும் அவனோ, யாவரையும் கேட்கக்கூடியவன்.’ அல்குர் ஆன்-21:23
ஒரு பொருளை உருவாக்கியவனுக்கே அதன் நுட்பங்கள் அனைத்தும் தெரிந்து அதை எப்படி, எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு ஞானம உள்ளது. அதன் உண்மைக ்காரணம் மனிதனின் அற்ப அறிவுக்கு எட்டாத ஒன்று. இருப்பினும் அல்குரான் அல் ஹதீஸ் ஒளியில் ஒரு சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். இன்றைய உம்மத்திற்கு சராசரி வாழ்வு 60-70 வருடங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.
மிக குறைந்த வருடம் வாழும் நமக்கு மதுவினால் வரும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம் பாதிப்பை ஏற்ப்படுத்தும். அதே சமயம் முன்பு வாழ்ந்த நபிமார்கள் உம்மத்திற்கு நீண்ட வாழ்வு கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, நூஹ்(அலை) அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்து அவர் மக்களுக்கு போதனை செய்தார்கள். இப்படி நீண்ட வாழ்வு கொடுக்கப்பட்ட மக்களுக்கு மதுவின் தீமை சிறிது, நன்மை அதிகம். மேலும் முன் வாழ்ந்த மக்கள் நம்மை விட பலசாலிகளாக இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்-30:9,40:21 ) மேலும் அன்றைய மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள்.எந்த ஒரு சுற்றுச்சூழல் கேடும், மாசும், இரசாயன கழிவுகளும் தோன்றாத காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு மதுவின் தீமை பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை.
ஆனால் இன்று ” மனிதன் செய்த தீவினையின் காரணமாக கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றிவிட்டன. “( Global Warming,Atomic polution ) அல் குர் ஆன்-30:41. என்று அல்லாஹ் கூறுவது போல இன்று நிலம் நீர் காற்று ஆகாயம் அனைத்தும் ரசாயன விஷமாக, வாழ்வாதாரங்கள் மாறிய சூழலில் வாழும் நமக்கு,மதுவினால் ஏற்படும் தீங்கு மிகக்கடும் பதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவான உண்மை.எனினும் உண்மைக்காரணம் படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
போதை தரக்கூடிய பொருள்கள் உலகில் ஏராளம் உண்டு.அவைகள் திட, திரவ, வாயு எனும் மூன்று நிலைகளில் கிடைக்கிறது. ஆனாலும் அதிகம் போதை தரக்குடியது ,சமுதாயத்திற்கு பெரிதும் தீங்கிழைப்பது என்று அரசாங்கங்கள் கருதுவது திட வடிவில் உள்ள ஹெரோயின், கோகைன் ,ஹஷிஸ் ,கஞ்சா,அபின் போன்றவைகளைத்தான்.பெரும்பாலான நாடுகள் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கின்றன. ” டாஸ்மாக் ” சாராய பாட்டிலை வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்தாலும்,அரசுக்கு கவலையில்லை ஏனேனில் அவை சட்டபூர்வமான போதை.ஆனால் அதே சமயம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தால் 10 வருட சிறை தண்டனை அத்துடன் குண்டர் சட்டமெல்லாம் பாயும்.
ஏனென்றால் அரசின் செல்லப்பிள்ளையாக,வருவாய் ஈட்டித்தரும் மூத்த (குடி) மகனாக மதுவை அரவணைத்து,ஆசீர்வதித்து பட்டி தொட்டிதோரும்,கவர்மென்ட் சரக்கை ஆறாக ஓடவிட்டு கஜானாவை நிறைக்கின்றனர். உலகில் நல்ல(குடி)மகனை உருவாக்க ஒவ்வொரு நாடும் பாடுபடுகின்றன. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளின் அரசாங்க கப்பல் மிதப்பது” தண்ணீ” வருவாயில்தான். மது குடிப்பதை எல்லா குடியரசுகளும் சட்டபூர்வமாக்கி மக்களின் நல்வாழ்வை சீரழிக்கின்றன.இவர்கள் பார்வையில், மதுவை விட போதை மருந்துகள் பெரும் தீமையாகத்தெரிகிறது.இவைகளை தடுக்க கடும் சட்டம். ஆனால் பிராந்தி, விஸ்கி,ரம், ஜின், ஒயின் சாராயம் போன்றவை சமுதாய அங்கீகரிக்கப்பட்ட (Social Drinks) பானமாக ஆராதிக்கப்படுகிறது..
போதை வருவாயில் தள்ளாடும் தமிழ்நாடு அரசு
இன்றைய குடியரசு ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மது போதை தாராளமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.குறிப்பாக தமிழ்நாடு அரசு இதற்கு தனித் துறை ஏற்படுத்தி சேவை செய்கிறது. “TASMAC” (Tamil Nadu State Marketing Corporation) தமிழ்நாடு முழுவதும் சுமார் 6500 சில்லறை கடைகள் 36000 ஊழியர்கள் 41 சேமிப்பு கிடங்குகள் மூலம் தமிழ் மக்களின் தாகங்களை தீர்க்கிறார்கள். தெருக்குழாயில் தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்றாலும் ‘டாஸ்மாக்கில்” தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்.
1983 ல் டாஸ்மாக்கின் வருமானம் வெறும் 183 கோடி ரூபாய் மட்டுமே, ஆனால் இன்று ( 2009-2010 ) சுமார் 12490 கோடி ரூபாய். தமிழக அரசின் மொத்த வருவாயில் பாதி வருவாய் போதை வருவாய்தான். இந்த வருமானம் ஆண்டுதோறும் சுமார் 20% அதிகரிப்பதாக அறிவிக்கிறார்கள். இதன் பொருள் 20% இளைஞர்கள் போதைக்குள் நுழைகிறார்கள் என்பது மறைமுக உண்மை. கடந்த அக்டோபர் மாத தீபாவளி பண்டிகை இரண்டு நாளில் மட்டும் சரக்கு விற்பனை 160 கோடியாம். இது சாதனையா அல்லது வேதனையா?
மேலைநாடுகளில் கிருஸ்துவ மதத்தின் பெயரால் ஆன்,பெண்,சிறுவர்,சிறுமி என குடும்பமே குடியில் மூழ்கியுள்ளனர். ” என் மாம்சத்தை புசித்து,என் இரத்தத்தை பானம்பன்னுகிறவனுக்கு நித்தியா ஜீவன் உண்டு.”-யோவான் –6:54 என்று இலக்கிய உவமான உவமேயத்தொடு தன்னை இரத்தமும் தசையுமாய் பின்பற்றும்படி இயேசு கூறியதை தவறாக விளங்கி “அப்பம் என் உடல் ஒயின் என் இரத்தம்” என்று மதுவை சுவைக்கின்றனர். மதுவிற்கு எதிராக ஏராளமான பைபிள் வசனங்கள் உள்ளதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. (எபேசியர் -5:18, லேவி-10:9, பழமொழி-20:1,23:20,23:30, லூக்கா-1:15, ரோமன்-13:13), ” வேசித்தனமும் திராட்சை ரசமும் மது பானமும் இருதயத்தை மயக்கும் “-ஓசியா-5:11. இந்தியாவிலேயே அதிக மது விற்பனை எங்கு தெரியுமா? கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கேரளா மாநிலம் சாலக்குடி பகுதியில்தான். ஊர் பெயரைக்காப்பற்ற மக்கள் சாலக்குடிக்கிறார்கள். ஆம்! நன்றாக குடிக்கிறார்கள்
ஆனாலும் மது விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம். தள்ளாடித்திரியும் தமிழர்கள் இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆம்! இந்தியாவிலேயே அதிகமானோர் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். கடந்த ஆண்டு மட்டும் 16561 நபர்கள். அதாவது ஒவ்வொருமணி நேரத்திற்கும் 15 பேர்கள் இந்த தற்கொலை சாவுகளில் 50% பின்னணியில் இருப்பது மதுப்பழக்கமே.
“அப்பனுக்கு சாராயம் பிள்ளைக்கு சத்துணவு” இதுவே அரசின் கொள்கை. கல்லூரி மாணவர்களுக்கு அரசு கூறும் புதிய ஆத்திசூடி –ஊக்க”மது”கைவிடேல். எனவேதான் தேர்வில் பாஸ்மார்க் கிடைக்கா விட்டாலும் “டாஸ்மாக்’ கிடைக்கிறது என்று ஆறுதல் அடைகிறார்கள்.
ஆளும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி தந்த ஆய்வறிக்கை
மதுபானங்கள் மூலம் மக்களை சுரண்டி ஆதாயம் அடைந்த ஆளும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி தந்த ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு பிரிட்டனில் வெளியாகி பாராளுமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. போதை மருந்துகள் குறித்து ஆய்வு நடத்திய Independent scientific committee on drugs.(ISCD) மற்றும் European Monitoring Centre for Drugs and Drug Addition.(EMCDDA) பிரிட்டனின் ஐரோப்பிய ஆய்வு மையம் பேராசிரியர்.டேவிட் நட் தலைமையில் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான “Lancet Medical Journal”லிலும் வெளியாகி மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.
காரணம் என்னவென்றால், இதுநாள்வரை அனைத்து நாடுகளும் பிராந்தி,விஸ்கி,ஒயின் போன்ற மது வகைகளால் மக்களுக்கு பெரிய அளவில் தீமை இல்லை என்று அவைகளை சட்டபூர்வமாக விற்று குடிமக்களை போதையில் தள்ளினர்.அதேசமயம் ஹெரோஇன் ஹஷிஸ், கஞ்சா போன்ற போதை மருந்துகள் பயங்கர ஆபத்தானவை என்று கூறி ஜெயிலில் தள்ளினர்.
பேரா.டேவிட் நட் அவர்களின் ஆய்வு, இக்கருத்துக்களை தலைகீழாக புரட்டிப்போட்டது. ஆய்வுக்குழுவினர் ஒரு புதிய அளவு கோலை கையாண்டனர். மதுபானம் குடிப்பதினால்,குடிப்பவர்க்கு ஏற்படும் தீமைகளை ஒன்பது வகையாகவும், மது குடிப்பதினால் மற்றவர்களுக்கு சமூகத்திற்கு ஏற்ப்படும் தீமைகளை ஏழு வகையாகப் பிரித்து, அதில் குற்றச்செயல், வன்முறை, சுற்றுச்சூழல் கேடு,குடும்ப சீர்குலைவு, நாடுகளுக்கு இடையில் ஏற்ப்படும் பாதிப்பு, பொருளாதார இழப்பு என்று வகைப்படுத்தி மதிப்பிட்டனர். இறுதியில் அதிகபட்ச தீமைகளை ஏற்ப்படுத்தும் போதை பொருள்களுக்கு 100 புள்ளிகளும், போதை அறவே இல்லாத பொருள்களுக்கு 0 புள்ளியும் கம்ப்யூட்டரில் கொடுத்து கணக்கிட்டனர்.
இறுதி ஆய்வு முடிவில், அரசுகள் சாதரணமாக கருதும் மது பானங்கள் தான் தனிமனித, சமூகத்திற்கு அதிக ஆபத்தானது என்று முதலிடம் பெற்றது. மதுபானம் 72 புள்ளி, இரண்டாவது இடத்தை 55 புள்ளி, ஹெராயினுக்கும்,54-கிராக்,33-கிறிஸ்டல் மெல்ட்,27-கோகைன், நமது பிரபலமான பீடி சிகரெட்டு, சுருட்டு புகையிலை ஆறாவது இடம் 26 புள்ளி.ஆம்பிடாமைன் .ஸ்பீடு 23, அபின் 20 புள்ளி, வாலியம் மற்றும் கேட்டாமைன் மாத்திரை 15, எல் எஸ் டி 7 புள்ளி .இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் நன்றாகத ்தெரிந்த போதை பொருள்களான எல்எஸ்டி. அபின், வாலியம் இவைகளை விட புகையிலை தீமையில் முன்னிலை வகிப்பதை கவனிக்கவும்.
மது குடிப்பது ஹராம் என்று அல்லாஹ் தடை செய்த பின்னர், இவ்வசனம் (அல்குர் ஆன் -5:90,91) மேலை நாட்டு அறிவு ஜீவிகளால் விமர்சிக்கப்பட்டது. கடும் போதை மருந்துகளான ஹெரோயின், கொக்கோயின், ஹஷிஸ் போன்றவைகளைப்பற்றி எதுவும் கூறாமல், சமுகத்தின் அந்தஸ்துமிக்க பானாமான மதுவை மட்டும் அல்லாஹ் தடை செய்ததேன்? என்று கேள்வி எழுப்பினர். இவர்களுக்குப் பதிலாக நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை முன்வைத்தோம். “போதை தரும் பொருட்கள் சிறியதோ, பெரியதோ அனைத்தும் ஹராம்.” முஸ்லிம்,அபூதாவூது.
அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்களின் பார்வையில் சாதாரண தீமையாக கருதப்பட்டது மதுபானம்.ஆனால் படைத்த இறைவனுக்கு எதில் தீமை அதிகமிருக்கும் என்பதை அறிந்திருந்ததால்,தனிப்பட்ட போதை மருந்துகளைக் குறிப்பிடாமல், தீமையில் முதன்மைப்பங்கு வகிக்கும் திரவ மதுவை தடை செய்துள்ளான்.
எந்த மேலை நாட்டுமக்கள் மது குடிப்பதால் அதிக தீமை இல்லை என்று கருதினார்களோ, அந்த மக்களில் உள்ள அறிஞர்கள் மூலமாக அல்லாஹ் உண்மையை உலகிற்கு உணர்த்தி உள்ளான். அல்ஹம்துலில்லாஹ் !
“அனைவரையும் படைத்தவன் (அவைகளில் உள்ளவைகளை) அறியமாட்டானா? அவனோ உட்கிருபை உடையவனாகவும் (அனைத்தையும்)வெகு நுட்பமாக அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான்.” –அல்குர் ஆன் -67:14.

எஸ்.ஹலரத் அலி –ஜித்தா
இக்கட்டுரைக்கு ஆதாரம்:
1.The Lancet Journal-6Nov.2010.vol.376,issue-9752. NN
2.WWW.thelancet.com/journal/article/pllso140-6736
3.WWW.bbc.co.uk/news/uk-11660210.
http://www.readislam.net/portal/archives/3864

2 ஏப்., 2013

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம்

த்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது. அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி
உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!

எரிக்கும் பூ!
இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் ‘அதுவாக இடிந்துவிட்டது’ என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.

ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.

பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.

பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.
முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப் படுகின்றன.

இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.

கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.

ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத்
தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.
பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.

தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?
பாலபாரதி , MLA
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)

http://www.satyamargam.com/2067
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி