படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

14 டிச., 2010

இந்தியக் கனவு?




"விரைவில் இந்தியா வல்லரசாகும்". விஞ்ஞானிகள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பேட்டிகளிலும், மேடைகளிலும் முழங்கும் கோஷம் இது. இன்று நேற்றல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லப்படும் விஷயமிது. 

உண்மையில் இந்தியா வல்லரசாகுமா? இத்தனை ஊழல்கள், ஜாதிச் சண்டைகள், மதக் கலவரங்கள், சிகப்புத் தீவிரவாதம் எனப்படும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல், இத்தனையையும் மீறி, இந்தியா வல்லரசாக சாத்தியமுள்ளதா? இந்தக் கேள்விகளை பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வரலாற்று ஆய்வாளர், ராமச்சந்திர குஹா, அவர்களின் கருத்து சிந்திக்க வைக்கிறது.

பத்திரிகை ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், இந்தியா வல்லரசாவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்தியா வல்லரசாகாது, நொறுங்கியும் போகிறது" என்று கூறியருந்தார். இந்தியா வல்லரசாவது பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, "என்னுடைய சிந்தனை வேறுமாதிரியானது. நான் இந்தியா அமைதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று பதிலளித்திருந்தார்.

அவரது இந்த சிந்தனை, என்னை சிந்திக்க வைத்தது.

வல்லரசாகப் போகிறோம் என்பது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இதன் அடிப்படையில் உள்ள அர்த்தம் என்ன?

அனைத்து துறைகளிலும், அம்சங்களிலும், முழுமையான வளர்ச்சியை அடைந்த, தன்னிறைவைப் பெற்ற தேசங்களுடன், இந்தியா ஒப்பிடப்படுகிறது. இந்த தேசங்களின், அதாவது வல்லரசுகள் என்று சொல்லப்படும், சொல்லப்பட்ட நாடுகளின் நிலையை நாம் ஆராய வேண்டும்.

இன்றைய உலகில் வல்லரசு என்றால், பால்லிக் குழைந்தை கூட சொல்லும் பெயர் அமெரிக்கா. பொருளாதாரம், ராணுவம், நிலையான அரசியல், என்று அத்தனை அம்சங்களும் நேர்த்தியாக அமைந்திருக்கும் தேசம். ஆனால் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு இன்று கிடைத்திருக்கும் பெயர்?

சர்வதேச தாதா. வட்டார வழக்கில், விவரமாக சொல்வதென்றால், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாடு.

இந்தப் பெயர் வரக் காரணம், உலகிலுள்ள அனைத்து தேசங்களையும், கண்காணித்து, அங்கு ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் வகையில் உதவி என்ற பெயரில், பணம் முதல் ஆயுதம் வரை அனைத்தையும் வழங்குவது. அவசியம் ஏற்பட்டால், இருக்கும் அரசைக் கவிழ்த்துவிட்டு, தனக்கு சாதகமான அரசாங்கத்தை அமைப்பது.

இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடக் காரணம்? உலக நாடுகளுக்குத்  தான் ஒரு வல்லரசு என்ற தன் பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அவர்கள் தன்னைப் பார்த்து பயந்து மரியாதை செலுத்த வேண்டும். என்ற எண்ணம். இந்த எண்ணத்தில் இவர்கள் செய்த காரியங்கள், இவர்களுக்கே வினையாகி நிற்கிறது.

மத்தியக் கிழக்கில், தங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்க இவர்கள் மூட்டிவிட்ட தீவிரவாதம் எனும் நெருப்பு, இவர்களையே தாக்கி, இன்று உலகம் முழுதும் பரவி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகின் மாபெரும் வல்லரசாக கருதப்பட இங்கிலாந்து, இன்று சந்தித்து வரும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. அமெரிக்காவுக்கு இணையாக அவர்களது செல்வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், இன்று அமெரிக்காவிற்கு ஆதரவான நிலையை எடுத்து, பல நாடுகளின் கேட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நிலை, எந்த நேரத்தில், எந்த இடத்தில், தீவிரவாதிகள் தாக்குவார்களோ, என்ற பயத்தோடு, நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையை மக்களுக்கு அளித்து, பதட்டமான வாழ்க்கை நிலையாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு நிலையை இந்தியா அடைய வேண்டுமா?

வல்லரசாக வேண்டாம், நல்லரசாக இருந்தால் போதும் என்ற கோஷங்கள் ஆங்காங்கே ஒலிப்பதன் அர்த்தம் இது தான்.

நமது வளர்ச்சி இந்த தேசங்களைப்போன்று இருக்க வேண்டாம். கிட்டத்தட்ட தேசத்தையே உருக்குளைதுவிட்ட அணுகுண்டுத் தாக்குதலிலுருந்து, பீனிக்ஸ் பறவை போல, எழுந்து வந்திருக்கும், ஜபனைப் போன்றதாக இருக்கட்டும்.

மற்ற நாடுகள் நம்மைப் பார்த்து பயந்து, நம் வாழ வேண்டாம். இந்தியா போன்று வாழ்க்கை முறை இருக்க வேண்டும், தேசத்தின் வளர்ச்சியும்,அமைதியான அரசியல் நிலையும் அமைய  வேண்டும் என்று உலகிற்கு முன்மாதிரியாக இருப்போம்.

இந்தியக் கனவு

"விரைவில் இந்தியா வல்லரசாகும்". விஞ்ஞானிகள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பேட்டிகளிலும், மேடைகளிலும் முழங்கும் கோஷம் இது. இன்று நேற்றல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லப்படும் விஷயமிது. 

உண்மையில் இந்தியா வல்லரசாகுமா? இத்தனை ஊழல்கள், ஜாதிச் சண்டைகள், மதக் கலவரங்கள், சிகப்புத் தீவிரவாதம் எனப்படும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல், இத்தனையையும் மீறி, இந்தியா வல்லரசாக சாத்தியமுள்ளதா? இந்தக் கேள்விகளை பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வரலாற்று ஆய்வாளர், ராமச்சந்திர குஹா, அவர்களின் கருத்து சிந்திக்க வைக்கிறது.

பத்திரிகை ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், இந்தியா வல்லரசாவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்தியா வல்லரசாகாது, நொறுங்கியும் போகிறது" என்று கூறியருந்தார். இந்தியா வல்லரசாவது பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, "என்னுடைய சிந்தனை வேறுமாதிரியானது. நான் இந்தியா அமைதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று பதிலளித்திருந்தார்.

அவரது இந்த சிந்தனை, என்னை சிந்திக்க வைத்தது.

வல்லரசாகப் போகிறோம் என்பது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இதன் அடிப்படையில் உள்ள அர்த்தம் என்ன?

அனைத்து துறைகளிலும், அம்சங்களிலும், முழுமையான வளர்ச்சியை அடைந்த, தன்னிறைவைப் பெற்ற தேசங்களுடன், இந்தியா ஒப்பிடப்படுகிறது. இந்த தேசங்களின், அதாவது வல்லரசுகள் என்று சொல்லப்படும், சொல்லப்பட்ட நாடுகளின் நிலையை நாம் ஆராய வேண்டும்.

இன்றைய உலகில் வல்லரசு என்றால், பால்லிக் குழைந்தை கூட சொல்லும் பெயர் அமெரிக்கா. பொருளாதாரம், ராணுவம், நிலையான அரசியல், என்று அத்தனை அம்சங்களும் நேர்த்தியாக அமைந்திருக்கும் தேசம். ஆனால் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு இன்று கிடைத்திருக்கும் பெயர்?

சர்வதேச தாதா. வட்டார வழக்கில், விவரமாக சொல்வதென்றால், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாடு.

இந்தப் பெயர் வரக் காரணம், உலகிலுள்ள அனைத்து தேசங்களையும், கண்காணித்து, அங்கு ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் வகையில் உதவி என்ற பெயரில், பணம் முதல் ஆயுதம் வரை அனைத்தையும் வழங்குவது. அவசியம் ஏற்பட்டால், இருக்கும் அரசைக் கவிழ்த்துவிட்டு, தனக்கு சாதகமான அரசாங்கத்தை அமைப்பது.

இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடக் காரணம்? உலக நாடுகளுக்குத்  தான் ஒரு வல்லரசு என்ற தன் பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அவர்கள் தன்னைப் பார்த்து பயந்து மரியாதை செலுத்த வேண்டும். என்ற எண்ணம். இந்த எண்ணத்தில் இவர்கள் செய்த காரியங்கள், இவர்களுக்கே வினையாகி நிற்கிறது.

மத்தியக் கிழக்கில், தங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்க இவர்கள் மூட்டிவிட்ட தீவிரவாதம் எனும் நெருப்பு, இவர்களையே தாக்கி, இன்று உலகம் முழுதும் பரவி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகின் மாபெரும் வல்லரசாக கருதப்பட இங்கிலாந்து, இன்று சந்தித்து வரும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. அமெரிக்காவுக்கு இணையாக அவர்களது செல்வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், இன்று அமெரிக்காவிற்கு ஆதரவான நிலையை எடுத்து, பல நாடுகளின் கேட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நிலை, எந்த நேரத்தில், எந்த இடத்தில், தீவிரவாதிகள் தாக்குவார்களோ, என்ற பயத்தோடு, நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையை மக்களுக்கு அளித்து, பதட்டமான வாழ்க்கை நிலையாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு நிலையை இந்தியா அடைய வேண்டுமா?

வல்லரசாக வேண்டாம், நல்லரசாக இருந்தால் போதும் என்ற கோஷங்கள் ஆங்காங்கே ஒலிப்பதன் அர்த்தம் இது தான்.

நமது வளர்ச்சி இந்த தேசங்களைப்போன்று இருக்க வேண்டாம். கிட்டத்தட்ட தேசத்தையே உருக்குளைதுவிட்ட அணுகுண்டுத் தாக்குதலிலுருந்து, பீனிக்ஸ் பறவை போல, எழுந்து வந்திருக்கும், ஜபனைப் போன்றதாக இருக்கட்டும்.

மற்ற நாடுகள் நம்மைப் பார்த்து பயந்து, நம் வாழ வேண்டாம். இந்தியா போன்று வாழ்க்கை முறை இருக்க வேண்டும், தேசத்தின் வளர்ச்சியும்,அமைதியான அரசியல் நிலையும் அமைய  வேண்டும் என்று உலகிற்கு முன்மாதிரியாக இருப்போம்.

4 டிச., 2010

பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்

கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு!

களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று! 

ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!

முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், மாமனார், தந்தை,மகன் சகோதரன் உறவுமுறை தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர்.

நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?

விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்? 

இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?

ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!

*******
பர்தாவும் பைபிளும் 
பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல் 

பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?! 

துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?

காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம்



உன்னைப்போல் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முஸ்லிம்களைக் குறித்து நச்சுக் கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், யாரை யார் தீவிரவாதி என்று சொல்வது என்பதற்கு விவஸ்தை வேண்டாமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுமனிதன் (காமன்மேன்),சட்டத்தை கையிலெடுக்கும் செயலை நியாயப்படுத்தும் இப்படத்தில் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்-அவர்களால் பாதிக்கப்படும் அனைவரும் இந்து காமன்மேன் என்ற நச்சுக்கருத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை அநியாயத்துக்கு விமர்சனம் எழுதி, தேவையற்ற பில்டப் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக்கி விட்டார்கள்!

கமல் விடுவிக்கக்கோரும் நால்வரும் தீவிரவாதிகளாம்! அவர்களில் மூவர் காஃபீர்களைக் கொல்வதற்காக நேர்ந்து விடப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள். ஒரேயொருவர் அப்பாவி தீவிரவாதி! ஆம்! தீவிரவாதிகளென்று தெரியாமல் தெரியாத்தனமாக RDX சப்ளை செய்ததால் அப்பாவி தீவிரவாதி!

சினிமாக்களில் தீவிரவாதிகளைத் தட்டிக்கேட்பவர்கள் எல்லோருமே ஓர் அம்பியாகவோ அல்லது முஸ்லிமல்லாத காமன் மேன்களாக இருப்பது நெருடுகிறது. ஒருசமயம் முஸ்லிம்களில் காமன் மேன் (COMMON MAN) இருக்கக்கூடாது என்று எங்காவது சட்டம் உள்ளதோ என்னவோ?!


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தைரியமாகக் கண்டித்தும், இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட மருதநாயகம் என்ற யூசுப்கான் குறித்து படமெடுக்கப்போவதாக பிலிம்காட்டிய கமல், இடையில் நாத்திகராகி, ரங்கராஜ நம்பியாக தசாதவதாரமெடுத்து ஐம்பதாண்டுகள் திரையுலகில் கொட்டைபோட்டு சேரவேண்டிய இடத்திற்கு சரியாகச் வந்துள்ளார் எனுமளவுக்கு "உன்னைப்போல் ஒருவனில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான காவிவசனங்களை மானாவரியாக தூவியுள்ளார்.

தீவிரவாதிகளென்றால் பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதாவது ஒரு 'கான்' ஆக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபைமீறி, இதில் சொல்லப்படும் தீவிரவாதிகளெல்லாம் இந்திய முஸ்லிம்கள். படம் முக்கால்வாசி எடுத்த பிறகே காமன்மேனின் கோபத்திற்கான காரணம் சொல்லப் படவில்லை என்று உறுத்தியதோ என்னவோ பெஸ்ட் பேக்கரி படுகொலை, கற்பினிப் பெண்ணைக் கருவறுத்தது என குஜராத் பயங்கரவாதத்தையும் சேர்த்து தன்னை நடுநிலையாளராக நடிக்க முயற்சித்துள்ளார் என்றாலும் பரவலான நச்சு வசனங்களால் சாயம் வெளுத்துவிட்டது!

காமன்மேனுடன் போனில் கெஞ்சும் போலீஸ் கமிஷனர், நம்நாட்டிலுள்ள எத்தனையோ தீவிரவாதிகளை எப்படி தண்டிப்பாய்? என்று கேட்கும்போது சீட்டுக் குலுக்கிப்போட்டதில் தற்போதைக்கு இந்த நால்வரின் பெயர்களே வந்தன என்று சொல்கிறார். அத்வானி, நரேந்திரமோடி, பால்தாக்கரே, பிரவீன் தொக்காடியா முதல் பிரஞ்யாசிங் வரை நீளும் பட்டியலில் சீட்டுக்குலுக்கிப் போடாமலேயே தேர்வு செய்திருக்கலாமே என்றும் கேட்கத் தோன்றுகிறது.

குஜராத்தில் கருவருத்துக் கொல்லப்பபட்ட நான்கு மாதக் கற்பினியைக் காப்பதற்கு நாட்டில் எத்தனையோ கிருஷ்ணன்கள் இருந்தும் ஒரேயொரு கிருஷ்ணன்கூட முன்வரவில்லையே என்று நேர்மையாக ஆதங்கப்படும் காமன்மேன் கமல், தீவிரவாதிகளை முஸ்லிம்களாகவே காட்டியிருப்பது யாருடைய நிர்ப்பந்தமோ தெரியவில்லை! 

சூத்திரன் கொலை செய்தால் கொன்றவனுக்கு மரணதண்டனை! பார்ப்பனன் கொலைசெய்தால் குடுமிக்கு மட்டுமே மரணதண்டனை என்று ஹேராமில் காட்டிய கமலுக்கு கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

"..................உயிருக்கு உயிர்,கண்ணுக்குக் கண்,மூக்குக்கு மூக்கு,காதுக்கு காது, பல்லுக்குப் பல்; காயங்களுக்குச் (சமமான) காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்............................................."(குர்ஆன் 005:045)

2 டிச., 2010

ஜனநாயகம்–பணநாயகம்–குண்டர்நாயகம்!!


நம் தாய்த் திருநாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். பெரும் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம். ஆனால் நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உண்மையில் நடைபெறுவதோ போலி ஜனநாயகமாகும். அதாவது 100% மக்களில் சுமார் 50% அல்லது 60% மக்கள் வாக்களித்து அதில் பலமுனைப் போட்டியில் சுமூர் 20% அல்லது 25% வாக்குகளைப் பெறறவர் வெற்றி பெற்று சட்டசபைக்கோ மக்கள் மன்றத்திற்கோ, எம்.எல்.ஏ., எம்.பி.யாகச் செல்லும் கேளிக் கூத்தையே பார்த்து வந்தோம். 100% மக்களில் 25% வாக்குகளைப் பெற்றவர் எப்படி பெரும்பான்மை மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்ல முடியும்.
எனவேதான் அதைப் போலி ஜனநாயகம் என்கிறோம்.அது மட்டுமல்ல, செல்வந்தர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களிப்பதைக் கெளரவக் குறைவாகக் கருதி வாக்களிக்கவே மாட்டார்கள். நடுத்தர, ஏழை எளிய மக்களே வாக்களிப்பார்கள். ஆனால் ஆட்சியோ வாக்களிக்காத அந்தச் செல்வந்தர்களின் கைப்பாவையாகச் செயல்படும். இந்த வகையிலும் நமது நாடு போலி ஜனநாயகத்தையே கடைபிடித்து வந்தது.
இந்த நிலையிலிருந்து தாழ்ந்து நமது நாடு போலி ஜனநாயகத்திலிருந்து முன்னேறி(?) பணநாயகத்தில் அடியெடுத்து வைத்தது. பணத்தை அராஜக வழிகளில் ஈட்டிய பண முதலைகள் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை தேர்தல் காலங்களில் முறை தவறி செலவிட்டு மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி; அது கொண்டு ஆட்சியில் அமர்ந்து செலவழித்த பணத்தை பன்மடங்காகப் பெறும் வியாபார(?) தந்திரத்தை அரசியல்வாதிகளாக மாறி கடைபிடிக்க ஆரம்பித்தனர். அதனால் போலி ஜனநாயகம் பணநாயகமாக மாறியது. கொழுத்த ஆதாயம் தரும் ஒரு வியாபாரச் சந்தையாக அரசியல் மாறியது. இதிலும் மனநிறைவு அடையாத அரசியல்வாதிகள் இப்போது பண நாயகத்திலிருந்து குண்டர் நாயகத்திற்கு முன்னேறி(?) இருக்கிறார்கள்.
சமீபத்தில் இடம்பெற்ற தமிழக திருமங்கலம் தொகுதியின் சட்டசபை இடைத்தேர்தல் எமது இந்’தக் கூற்றை உண்மைப்படுத்துகிறது. அந்த ஒரே ஒரு தொகுதித் தேர்தலுக்காகச் செலவிடப்பட்ட பணத்தை வைத்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் நியானமான தேர்தல் நடத்தி விடலாம் என்று சொல்லும் அளவிற்கு அங்கு பணம் தண்ணீராகப் பாய்ச்சப்பட்டது. குண்டர்களின் அராஜகத்திற்கோ அளவே இல்லை. இதற்கு இந்தக் கட்சி, அந்தக் கட்சி என சொல்ல முடியாது. செல்வாக்கு மிக்க அனைத்துக் கட்சிகளின் நிலை இதுதான்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த இடைத்தேர்தலில் 89% வாக்குகள் பதிவாகியுள்ளன என்றால் பண பலத்தையும் குண்டர் பலத்தையும் அளவிட்டுக் கொள்ளலாம். இந்த நிலை நீடிக்குமானால், இனிமேல் இந்தியாவில் போலி ஜனநாயக ஆட்சியும் நீடிக்காது. அரைகுறையாக நடந்து கொண்டிருக்கும் குண்டர்களின் ஆட்சியே முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்யும் மன்னராட்சியைவிட, சர்வாதிகார ஆட்சியைவிட மிகமிகக் கொடுமையான குண்டராட்சிக்குக் கீழ் இந்திய மக்கள் கொண்டு வரப்படுவார்கள். இந்த அராஜகப் போக்கு தொடர வேண்டுமா என்பதை அறிவு ஜீவிகளும் மக்கள் நலன் நாடுபவர்களும் நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஆட்சி என்பதே மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் சேவை செய்ய வேண்டும் என்ற நன்நோக்கில் அமைக்கப்படுவதே. எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மக்களுக்குத் தொண்டு செய்வதாக, சேவை செய்வதாகக் கூறிக் கொண்டே களத்தில் இறங்குகிறார்கள். உண்மையிலேயே அவர்களின் நோக்கம் மக்களுக்குத் தொண்டு செய்வதாக இருந்தால் அந்த எம்.எல்.ஏ. பதவிகளோ, எம்.பி.பதவிகளோ இல்லாமலும் தொண்டு செய்ய முடியும். எனவே அவர்கள் தேர்தல் அல்லாத காலங்களில் தொகுதியைச் சுற்றி சுற்றி வந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். மக்களின் குறைகேட்டு அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகள் செய்து தொண்டு செய்ய வேண்டும். அதன் மூலம் அந்தத் தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். மக்கள் அவரது தொண்டை சேவையை அனுபவத்தில் கண்டு அவரை அடையாளம் காண வேண்டும்.
இப்படி அனைத்துத் தொகுதிகளிலும் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டு செய்யும் நல்லுள்ளத்தோடு சிலர் தயாராக வேண்டும். தேர்தல் காலத்தில் இவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதோ, அதற்காகத் தொகுதிகளில் பிரசாரமோ ஒருபோதும் இனி இருக்கக் கூடாது. தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் தொகுதி மக்களைச் சந்திக்கும் நிலை இருக்கக் கூடாது.
இப்படி சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் தான் பல சீர்கேடுகள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்களிக்கச் சத்தியம் வாங்கும் அவல நிலை. அதனால் கட்சிகளுக்கிடையே அடிபிடி தகராறு, சட்டம் ஒழுங்கு சீர்கெடல், மத்திய இராணுவம் அழைக்கப்பட்டது என மக்களின் வரிபணம் பல ஆயிரம் கோடி பாழாகும் அநியாயம் அரங்கேறுகிறது. எனவே தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் குறிப்பாக வேட்பாளர்கள் தொகுதி மக்களை சந்திக்கும் நிலை முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். தேர்தல் அல்லாத காலங்களில் அவர்கள் தொகுதிகளை குட்டி போட்ட நாய்போல் சுற்றி சுற்றி வந்து மக்களுக்குத் தொண்டு செய்து, சேவையாற்றி தங்களின் சேவைகள் மூலம் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடிக்க முடியும். இது உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டு செய்யும் தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கு மிகமிக எளிதானதே ஆனால் தொண்டு என்ற பெயரால் மக்களை ஏமாற்றி, வஞ்சித்துக் கோடி கோடியாக பணம் பண்ண விரும்பும் கயவர்களுக்கு இது எட்டிக் காயாகக் கசக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
முன் காலத்திலாவது தொலைக்காட்சி போன்ற பிரசார வசதிகள் இல்லாத காரணத்தால், வேட்பாளர்கள் தொகுதிகளுக்குச் சென்று வாக்கு கேட்கும் நிலை இருந்தது. இன்றோ தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடே இல்லை. அரசே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அளித்துள்ளது. எனவெ தொகுதிகளுக்குச் செல்லாமலேயே வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலம் தொகுதி மக்களை அடையமுடியும். தங்களின் சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியும். வீடு வீடாகத் தேர்தல் காலத்தில் படியேற வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஜனநாயகம், பணநாயகமாகவோ, குண்டர் நாயகமாகவோ ஆகக் கூடாது என்ற உயர்நோக்கு அரசுக்கு இருந்தால் சட்டம், ஒழுங்கு கெட்டு, தேர்தல் காலத்தில் மக்களின் அமைதிக்குப் பங்கம் வரக்கூடாது என அரசு விரும்பினால், மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடி வீண் விரயம் ஆகாமல் காக்க அரசு விரும்பினால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் மக்களை தொலைக்காட்சிகளில் அல்லாமல் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னால் வேட்பாளர்கள் தொகுதி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, செய்த சேவை இவை மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் மூலம் அவர்களின் வாக்குகளை அடைவதே முறையான ஜனநாயகமாகும்.
தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை மதிமயக்கி, ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அபகரிக்கும் அநியாய நிலை முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட வேண்டும். அப்படியானால்தான் அரசியல்வாதிகள் முழங்கும் ஜனநாயகம் நிலைக்கும் இல்லை என்றால் பணநாயகம், குண்டர்நாயகம் மக்களை ஆட்டிப்படைக்கும் கொடூர ஆட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும் அவலமே எஞ்சி நிற்கும்.
ஆயினும் மனிதக் கற்பனையில் அதாவது மனுதர்மத்தால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி, ஏழைகளையும் நடுத்தர மக்களையும் சுரண்டி கோடீஸ்வரர்களானவர்கள் மேலும் மேலும் பல்லாயிரம் கோடிகள் ஈட்டவே துணை நிற்கும். இதற்குச் செல்வந்தர்களே பயணிக்கும் விமானங்களுக்கு பெட்ரோல் விலையை குறைத்த அரசு, ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் பயணிக்கும் வாகனங்களின் பெட்ரோல் டீசல் விலையைப் போதிய அளவில் குறைக்காமல் அடம் பிடிப்பதும் வாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியானதும் போதிய ஆதாரமாகும்.
ஆக ஜனநாயக ஆட்சி முறை ஏழைகளைப் புறந்தள்ளி முழுக்க முழுக்க வசதி படைத்தவர்களையே முற்றிலும் சார்ந்திருப்பதே போல், கம்யூனிஸ ஆட்சி முறையோ செல்வந்தர்களைப் புறந்தள்ளி தொழிலாளர்களையே முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் முறைகேடான செயல்பாடுகளுக்கும் துணை போகிறது. இதுவும் மனிதன் அமைத்த மனுதர்ம சட்டமே.
இந்த இரண்டு வகை மனுதர்ம சட்டங்களைப் புறந்தள்ளி, மனிதனைப் படைத்த இறைவன் அளித்துள்ள இறைச்சட்டம் மட்டுமே மனித சட்டமான மனுதர்மம் கலக்காத மிகத் தூய்மையான சட்டமாகும். இந்த இறைச் சட்டமே பரம ஏழைகள், ஏழைகள் தொழிலாளர்கள் செல்வந்தர்கள் என அனைத்து சாராருக்கும் நியாயம் வழங்கும் நடுநிலைச் சட்டமாக இருக்கிறது.
இந்த நடுநிலைச் சட்டத்தை இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. உள்ளத்திலிருக்கும் காழ்ப்புணர்வுகளை சில நிமிடங்கள் தூக்கி எறிந்துவிட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு அல்குர்ஆனை படித்து விளங்குகிறவர்கள் இந்த உண்மையை உணர முடியும்.
இன்று முஸ்லிம் மத குருமார்கள் அமைத்து வைத்திருக்கும் சட்டங்கள் இறைவன் அளித்த சட்டங்கள் அல்ல. இவர்களின் முன்னோர்களான புரோகிதர்கள், அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக சட்டம் வகுப்பது போல் புரோகிதர்களின் சுயநலன்களுக்காக அமைக்கப்பட்ட மனுச்சட்டங்களே இவை. இந்துக்கள் கடைபிடிக்கும் மனுச்சட்டம்-மனுதர்மம் போல், முஸ்லிம்கள் கடைபிடிக்கும் மனுச்சட்டம் – மனுதர்மமே. இந்த மதகுருமார்களான மதப்புரோகிதர்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லும் கட்டுக்தைகளையும் கற்பனைகளையும், மூட நம்பிக்கைகளையும், அனாச்சரங்களையும் இறைச் சட்டமாக நம்பி யாரும் ஏமாற வேண்டாம். அல்குர்ஆன் அவர்கள் மட்டுமே விளங்கும் ஒரு நூல் அல்ல. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புக்களைப் படித்து தாராளமாக மிகச் சரியாக விளங்க முடியும். இதில் இந்தப் புரோகிதர்களின் பூச்சாண்டியை ஒருபோதும் நம்பக்கூடாது.

www.annajaath.com/?p=951

காஷ்மீர், ஈழப் போராட்டங்களை நாங்கள் (மாவோயிஸ்டுகள்) ஆதரிக்கிறோம்!


வரவர ராவ் - இன்று இந்திய அரசும் மாநில அரசுகளும் அஞ்சி நடுங்கும் மாவோயிஸ்டு இயக்கத்திற்காக கருத்துத் தளத்தில் சமரசமின்றி போராடும் போராளி. அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றுபவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர். இவரின் எழுத்துகளும் பேச்சுகளும் ஆளும் வர்க்கத்தை தூக்கமிழக்கச் செய்பவை. ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்தவரை, ஒரு மாலை வேளையில் நேர்காணலுக்காக சந்தித்தேன். நடுத்தர வர்க்க மக்களிடம் மாவோயிஸ்டுகள் குறித்து இருக்கும் எண்ணங்களை கேள்விகளாக முன்வைத்தேன். பொருட்செறிவான பதில்கள் அவரிடமிருந்து வந்தன.
கே: மாவோயிஸ்டுகளால் போலீசார் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்கதையாகி விட்டதே, போலீசாரும் சம்பளத்திற்கு வேலைபார்ப்பவர்கள் தானே, அவர்கள் ஒன்றும் வர்க்க எதிரிகள் இல்லையே?
varavararao_1 ப: கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அரிதாகத்தான் நடைபெறுகின்றன. அரசு சொந்த மக்களின் மீதே பன்னாட்டு நிறுவங்களுக்காக ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் கொடூரமான போரை நடத்தி வருகிறது. இந்த நிலையில், போலீசாரை போர்க் கைதிகளாகத்தான் பார்க்க வேண்டும். அவர்கள் போர்க் கைதிகளுக்குரிய மதிப்புடன் நடத்தப்பட்டனர். பீகாரில் நான்கு போலீசார் கடத்தப்பட்டனர். பின் அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று ஜனநாயகத் தன்மையுடன் அவர்களில் மூவர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அதற்காக வருந்துகிறேன். ஆனால், ‘பழங்குடி மக்களுக்கு எதிரான போர் நிறுத்தப்படவேண்டும், அரச படையினர் திரும்ப அழைக்கப்பட வேண்டும்’ என்ற மாவோயிஸ்டுகளின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படவில்லை.
இவ்விஷயத்தில் எனக்கு நன்றி சொல்வதற்கு அழைத்த சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங்கிடம், ‘மாவோயிஸ்டுகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் ஏன் அவர்கள் கோரிக்கையை ஏற்று, குறைந்தது அப்பாவி பொதுமக்களையாவது விடுவிக்கக் கூடாது? மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘இது மாநில அரசின் பிரச்சனை’ என்று கூறும்போது, நீங்கள் இந்தப் போரை நிறுத்தக்கூடாது?’ என்று கேட்டேன். அவரும் பரிசீலிப்பதாகக் கூறினார். ஆனால் அதன் பின்தான் இரண்டு பெரிய போலி மோதல்களில் அப்பாவி பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். தோழர் மகேஸ், தாராபாய் இருவரும் போலிமோதல்களில் கொல்லப்பட்டனர். ஆக, அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
கே: ஆசாத் என்கவுண்டரில் நடந்தது என்ன?
ப: கடந்த மே மாதத்தில் மாவோயிஸ்ட் மைய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த தோழர் அப்பாராவும் தோழர் ஆசாத்தும் மும்பையில் சந்தித்து தாண்டேவாடா வருவது குறித்து திட்டமிட்டிருந்தனர். ஆனால் வரும் வழியில் அப்பாராவ் ஆந்திர புலனாய்வுப் போலீசாரால் தமிழக போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு நல்லமலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை அறிந்த ஆசாத் மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்தார். இச்சூழ்நிலையில் தான் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சுவாமி அக்னிவேஸ் மூலமாக அழைத்தார். 72 மணிநேரம் போர்நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தினார்.
அதற்கு ஆசாத், ‘இருவரும் ஒரே சமயத்தில் போர்நிறுத்தத்தை மூன்று மாதத்திற்கு செய்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்’ எனத் தெரிவித்தார். ஆனால் ப.சிதம்பரம், ஆசாத் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளத்தான் இப்பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தியிருக்கிறார். புலனாய்வுப் பிரிவினர் ஆசாத்துக்கும் அக்னிவேஸ்க்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை பின்தொடர்ந்து அவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டனர். இச்சமயத்தில் ஆசாத், நாக்பூரில் ஹேமச்சந்திர பாண்டேவை சந்தித்து விட்டு தண்டகாரண்யாவிற்கு பேச்சுவார்த்தை தொடர்பான கடிதங்களை எடுத்து செல்லத் தயாராகியிருந்தார். இச்சூழ்நிலையில்தான் இருவரும் கைது செய்யப்பட்டு, பின் ஆந்திரக் காடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
கே: இவ்வளவு உறுதியாக இது ஒரு போலி மோதல் என்கிறீர்களே எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்?
ப: ஜூலை 1ம் தேதி ஆசாத் தண்டகாரண்யா வருவதாக செய்தித் தொடர்பாளர் உசன்டிக்கு தகவல் அனுப்புகிறார். அவரும் ஆசாத்தை சீதாமண்டியில் சந்தித்து அழைத்து வருவதற்காக ஒரு பழங்குடித் தோழரை ஏற்பாடு செய்கிறார். 10.30 அல்லது 1.30க்கு சந்திப்பது என முடிவானது. ஆனால் 1.30 ஆகியும் ஆசாத் வரவில்லை. ஹேமச்சந்திர பான்டே விஷயத்தில் அதிக ஆதாரங்கள் உள்ளன. அவர் ஜூலை 30ல் நிஜாமுதீனில் கிளம்புகிறார். இரயில் தாமதமானதால் 3.15க்கு தன் மனைவி பபிதாவைத் தொலைபேசியில் அழைக்கிறார். 5.15க்கு இரயில் கிளம்பும்போது மீண்டும் ஒருமுறை அழைக்கிறார். இதை அவர் பத்திரிக்கைகளுக்கும் தெரிவித்துள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும்போது இவர்கள் போலீஸ் கூறுவது போல் ஆந்திரக் காடுகளில் இல்லை என்பது தெரியவரும். தொலைதொடர்புத்துறை இந்தப் பதிவுகளை அழிக்காமல் இருந்தால் உண்மை தெரியவரும்.
முதல் தகவல் அறிக்கையில் நக்சல்கள் மலை உச்சியில் இருந்ததாகவும் போலீஸ் கீழே இருந்ததாகவும் பதிவாகியிருக்கிறது. ஆனால் ஆசாத்தின் உடலில் குண்டு கீழிருந்து மேலாக துளைக்காமல் நேராகப் பாய்ந்திருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ஆசாத் 7.30 செ.மீ. இடைவெளியில் பாயின்ட் பிளாங்கில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இதை இந்தியாவின் தலைசிறந்த தடயவியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் 1.30 மணி நேரம் சண்டை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.பி. 4.30 மணிநேரம் சண்டை என்கிறார். ஜோடிப்பதில் அவர்களுக்கிடையிலேயே முரண்பாடு உள்ளது. சொராபுதீன் போலிமோதலைப் போன்று நீதிவிசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவரும். ஆனால் அரசு மறுக்கிறது. நாங்கள் போராடுகிறோம். அரசில் இருக்கும் மம்தா பானர்ஜி, ஆந்திர CPI(M), மேற்கு வங்க பார்வர்டு பிளாக் கூட நீதி விசாரணைக்கு வலியுறுத்துகிறார்கள்.
கே: மாவோஸ்டுகளில் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்திருக்கும் நபர் ஆசாத். அரசு ஏன் அவரைக் கொல்லவேண்டும்?
ப: ஆசாத் கொலை மூலம் அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பத்திரிக்கைகள், அறிவுஜீவிகளிடம் அரசு பேச்சுவார்த்தைக்குத் தயார் என நாடகமாடுகிறது. உண்மையில் அரசுக்கு போர் தேவைப்படுகிறது. அது பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கால வரையறை உள்ளவை. நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்க முடியாது. அதனால் சொந்த மக்களைக் கொன்றாவது முதலாளிகளின் நலனைப் பாதுகாக்க கொலை வெறியுடன் செயல்படுகிறது.
கே: பேச்சுவார்த்தை தொடர வாய்ப்பிருக்கிறதா?
ப: ஆசாத் படுகொலைக்குப் பின் நடைபெற்ற மாநில அரசுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இதற்கான பதில் உள்ளது. அதுவரை நக்சல் பிரச்சனைக்கு சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி, பேச்சுவார்த்தை என மூன்று அம்சத் திட்டம் வைத்திருந்த அரசு அதை இரண்டாக சுருக்கிக்கொண்டுள்ளது. ’பேச்சுவார்த்தை’ என்கிற அம்சம் திடீரென காணாமல் போயுள்ளது. இப்பொழுது காடுகளைக் கைப்பற்றுதல், வளர்ச்சித் திட்டம் செயல்படுத்துதல் என இரண்டு அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அதாவது மக்கள் எழுச்சியை நசுக்குவோம், பன்னாட்டு நிறுவனங்களை வளர்ப்போம் என்பது தான் இதன் சாரம்சம். வேதாந்தா, எஸ்ஸார், ஜிண்டால் முதலிய பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் காலக்கெடுவை நெருங்குகின்றன. இதனால் அரசு பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்ட மறுக்கிறது.
கே: ஆந்திராவில் தெலங்கானா கோரிக்கையை முன்வைத்து கத்தார் புதுக் கட்சியை துவக்கியுள்ளாரே?
ப: அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. தெலங்கானா கோரிக்கையை ஆதரிக்கும் பல அரசியல் இயக்கங்கள் இணைந்து தனி தெலங்கானாவை முன்னிறுத்தி ஒரு முன்னணியை அமைத்துள்ளன.
கே: ராகுல் காந்தி பழங்குடி மக்களோடு நெருக்கம் காட்டுகிறாரே. சமீபத்தில் கூட வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகப் போராடும் நியாம்கிரி மக்களோடு பேரணி நடத்தினாரே?
ப: அந்த நிறுவனத்திற்கு மக்களின் விருப்பத்தையும் மீறி காங்கிரஸ் அரசுதான் அனுமதியளித்தது. அவர் காங்கிரஸ் ஆளாத மாநிலங்களுக்கு மட்டுமே செல்லும் மர்மம் புரியவில்லை. உண்மையிலேயே பழங்குடி மக்கள் மீது அக்கறையிருந்தால் ஆந்திரா வரவேண்டியது தானே? ஆந்திரா, மஹாராஸ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் தான் அதிக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை எல்லாம் தன்னுடைய இமேஜை வளர்த்துக்கொள்ள ராகுல் செய்யும் நாடகங்கள். இத்தகைய நாடகங்கள் நேரு குடும்பத்திற்குப் புதிதல்ல.  
கே: காஷ்மீரில் சமீபகாலமாக இந்திய அரசுக்கு எதிராக எழுந்துள்ள மக்கள் எழுச்சியை எவ்வாறு பார்க்கிறீர்கள். மாவோயிஸ்டுகள் சுதந்திர காஷ்மீரை ஆதரிக்கிறீர்களா?
ப: காஷ்மீரும், வடகிழக்கு மாகாணங்களும் வரலாற்று ரீதியில் எப்பொழுதும் இந்தியாவோடு இருந்ததில்லை. தற்பொழுது ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி வரவேற்கத்தக்கது. காஷ்மீர் மக்களின் உண்மையான சுதந்திர உணர்ச்சி (AZADI) வெளிவந்துள்ளது. இனி சுதந்திர காஷ்மீர் கோரிக்கையை யாரும் வெளிநாட்டு சதி எனக் கூறமுடியாது. நாங்கள் முழுமனதுடன் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.
சாரு மஜீம்தார் தலைமையில் CPI(ML) உருவான காலகட்டத்திலேயிருந்து அனைத்து புரட்சிகர இயக்கங்களும் காஷ்மீரிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து வருகிறோம்.
புரட்சிகர எழுத்தாளர் சங்கம் 1970ல் உருவாகியபோது அதன் திட்டங்களில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கே: தாண்டேவாடாவில் நடப்பது பழங்குடி மக்களின் பிரச்சனையா மாவோயிஸ்டுகளின் பிரச்சனையா?
ப: நிச்சயமாக, போர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் தான். ஆனால் இது பழங்குடி மக்களுக்கான போர். ஆகவே இது பழங்குடி மக்களுக்கான மாவோயிஸ்டு போர் என்பதே சரி. பழங்குடி மக்களின் நிலங்களும் அவர்களின் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களால் அரசு உதவியுடன் பறிக்கப்படுகின்றன. நிலங்களும் இயற்கை வளங்களும் பழங்குடி மக்களுடையைவை; மாவோயிஸ்டுகளுடையவை அல்ல. தங்கள் நிலத்திற்காகப் போராடும் பழங்குடி மக்களுக்கு மாவோயிஸ்டுகள் ஒரு கவசமாக உள்ளனர்.
கே: மாவோயிஸ்டுகளின் இந்தப் போர் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பதற்கா அல்லது பழங்குடி மக்களின் காடுகளின் மீதான உரிமைக்காகவா? 
ப: இரண்டுக்கும் தான்.
கே: அப்படியானால் நாளை மாவோயிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைத்தால் காடுகளில் சுரங்கம் அமைக்க மாட்டீர்களா? அப்பொழுது காடுகளின் மீதான பழங்குடி மக்களின் உரிமை என்னவாகும்?
ப: ஒட்டுமொத்த பழங்குடி மக்களின் சுதந்திர முடிவுகளின் (COMMAN AND COLLECTIVE WILL) அடிப்படையிலேயே நிறுவனங்களின் கொள்கையும், சுரங்கக் கொள்கையும் முடிவுசெய்யப்படும். அது மட்டுமல்லாமல் சுரங்கத் தொழில், விவசாயத்திற்கு உதவும்படி அமையுமே தவிர அழிக்காது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான எந்த செயலும் செய்யப்படாது. இது முடியாதது அல்ல இதை நாங்கள் தண்டகாரண்யாவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
தற்போதைய அரசுக்கும் நாங்கள் அமைக்கப்போகும் அரசுக்கும் வேறுபாடு உள்ளது. தற்போதைய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்க முதலாளிகளுக்கு சுரங்கத்தை அனுமதிக்கிறது. ஆனால் நாங்கள் அமைக்கும் சுரங்கமானாலும் தொழிற்சாலைகளானாலும் உள்ளூர் மக்களுக்காக நடைபெறும். மீதமிருப்பவை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.  ஆதிவாசி மக்களின் ஒன்றுபட்ட நலன்களின் அடிப்படையிலேயே சுரங்கக் கொள்கை முடிவு செய்யப்படும். 
varavararao_2கே: புத்ததேவ் பட்டாச்சார்யா ‘மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள்’ என்றும், ‘அவர்கள் மாவோவின் பெயரை சொல்லத் தகுதியற்றவர்கள்’ என்றும் கூறியுள்ளாரே?
ப: நக்சல்களை பயங்கரவாதிகள் என்பது பிரிட்டிஷார் பகத்சிங்கை பயங்கரவாதி என்று அழைத்ததைப் போன்றது. ஆக பிரிட்டிஷாருக்கும் புத்ததேவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஹர்மத்வாணியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தான் லால்கரில் பயங்கரவாதப் படுகொலைகளை நடத்தியது. அவருக்கு மாவோவின் ஒரு மேற்கோளை நினைவுபடுத்த விரும்புகிறேன்
“விவசாயமும் தொழிற்சாலையும் மனிதனின் இரு கால்களைப் போன்றவை. தொழிற்சாலை விவசாயத்திற்கு உதவவேண்டும்”. இது தான் மாவோயிசம். இதற்கு அவர் எதிராக உள்ளார். அனேகமாக அவர் மாவோவைப் படிப்பதை மறந்துவிட்டார் என நினைக்கிறேன்.
கே: ‘மாவோயிஸ்டுகளை ஆதரித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் துரோகிகள்’ என அரசு அறிவித்துள்ளது பற்றி?
ப: மாவோயிஸ்டுகளை ஆதரித்தால் பத்தாண்டு சிறை என அரசு அறிவித்துள்ளது. உண்மையைக் கூறினால் துரோகிகள் என்றால், நாங்கள் துரோகிகள் அல்ல இராஜ துரோகிகள். இதுவே மகிழ்ச்சியானது. இவர்கள் தான் தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அவை மக்கள் ஆதரவுடன் தூக்கியெறியப்பட்டன. இதுவும் தூக்கியெறியப்படும்.
கே: சமீபகாலமாக மம்தா லால்கரில் ஆர்வம் காட்டுகிறாரே. ஆசாத் கொலைக்கு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்கிறாரே?
ப: அவருக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. அவர் முதல்வராக விரும்புகிறார். விரைவில் தேர்தல் வரப்போகிறது. இது மாவோயிஸ்டுகளுக்கு நன்றாகத் தெரியும்.  
கே: ஆனால் மாவோயிஸ்டுகள் மம்தாவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறதே?
ப: நிச்சயமாக இல்லை. இச்செய்திகள் ஊடகங்களாலும், சிபிஎம் கட்சியாலும் உருவாக்கப்பட்டவை. மாவோயிஸ்டுகள் மக்களை மட்டுமே ஆதரிக்கிறார்கள். எந்த தேர்தல் அரசியல்வாதிகளையும் ஆதரிப்பதில்லை.
கே: வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை இந்தியா இரண்டாவது வேகமாக வளரும் நாடு என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் நீங்கள் இந்தியா வளரவில்லை என்கிறீர்கள்?
ப: இந்த வளர்ச்சி யானைக்கும் எலிக்குமான வளர்ச்சியைப் போன்றது. அம்பானி பல லட்சம் கோடியில் வீடு கட்டியிருப்பதையும், ஆயிரக்கணக்கானோர் வீடில்லாமல் இருப்பதையும் இணைத்துப் பார்க்கும்போது இது வளர்ச்சியாகத் தோன்றுமா? ஆக, இங்கு வளர்ச்சி விகிதமோ, உற்பத்தியோ கேள்வியல்ல. அவை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது தான் முக்கியம். அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிறதா என்பது தான் கேள்வி.
அனைவருக்கும் உணவு, உடை, உறைவிட வசதி செய்யப்பட்டால், அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டால் அதை வளர்ச்சியாகக் கொள்ளலாம்.
நாங்கள் வளர்ச்சியை கீழிருந்து பார்க்கிறோம். அதாவது ஆந்திராவில் 1.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் உபரியாக உள்ளன. அதை நிலமற்ற தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்கிறோம். ஆனால் அரசு வளர்ச்சியை மேலிருந்து பார்க்கிறது. அது வேதாந்தாவிற்கு பல்லாயிரக்கணக்கான நிலத்தைக் கொடுக்கிறது. வேதாந்தாவின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாகக் கூறுகிறது. அதை நாங்கள் மறுக்கிறோம்.
கே: ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக மாவோயிஸ்டுகள் குரல் கொடுக்கவில்லை என தமிழகத்தில் பேசப்படுகிறதே?
ப: ஆந்திராவில் சட்டசபை முன்பு பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். டில்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஈழப் போராட்டத்தை ஆதரித்தும் பிரபாகரனை ஆதரித்தும் நானே கவிதை பாடினேன். பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எங்கள் இதழின் அட்டைப் படத்தில் அவர் படமே இடம்பெற்றிருந்தது. 
கே: அக்டோபர் 2-ல் சல்வா ஜுடும் படையின் தலைவர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்களே. முந்தைய சல்வா ஜுடும் வன்முறைக்கு மாவோயிஸ்டுகள் ஊடுருவியதுதான் காரணம் என்கிறார்களே?
ப: அரசு பழங்குடி மக்களைப் பிரித்து அவர்களுக்குள்ளாகவே சட்டவிரோதமான படையைக் கட்டி பழங்குடி மக்களுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. இது குறித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றமும் தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. இந்த சல்வா ஜுடும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தி சித்ரவதை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் ஊரை காலிசெய்வார்கள் என நம்புகிறது. நாடு முழுவதும் இந்த அரச ஆதரவு கூலிப்படையின் அட்டூழியங்களை எதிர்த்து குரல் எழும்பியபின் இப்பொழுது வேறு பெயரில் இயங்க முயற்சிக்கிறது.
 கே: இந்த உலகமய சூழலில் விவசாயிகள் தங்கள் நிலங்களையும் விவசாயத்தையும் விட்டுவிட்டு நகரங்களுக்கு கூலிகளாக துரத்தப்படுகிறார்கள். இச்சூழ்நிலையில் உழுபவனுக்கே நிலம் என்கிற முழக்கம் எப்படி கைகூடும் என நினைக்கிறீர்கள்?
ப: நக்சல்பாரி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது பண்ணையார்களிடமிருந்து நிலங்களை மீட்டு உழுபவனுக்குத் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் குறிப்பாக 1991க்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தன்வசப்படுத்தியிருக்கின்றன. இதனால் நிலம் வைத்திருந்த சற்று வசதியான விவசாயிகளும் விவசாயத்தை விட்டு துரத்தப்பட்டு கூலிகளாக்கப்பட்டுள்ளனர். ஆக எதிரிகள் மாறியுள்ளனர் நோக்கம் மாறவில்லை. மாறாக நிலப் பகிர்ந்தளிப்பு என்பது விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இன்று தேவையான ஒன்றாக உள்ளது.
கே: நேபாள மாவோயிஸ்டுகள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வந்ததுபோல் எதிர்காலத்தில் இந்திய மாவோயிஸ்டுகள் வர வாய்ப்பிருக்கிறதா?
ப :நிச்சயமாக இல்லை.
கே: அறிவுஜீவிகளும் அரசும் நக்சல் பிரச்சனை என்பது பொருளாதாரப் பிரச்சனை என்று கூறுகிறார்கள். அரசு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினால் நக்சல் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்கிறார்களே? 
ப: முதலில் அரசையும், அறிவுஜீவிகளையும் ஒன்றாகப் பார்ப்பதை மறுக்கிறேன். அரசு நக்சல்களை அழிக்க முயல்கிறது. ஆனால் அறிவுஜீவிகள் அவ்வாறு இல்லை என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அறிவுஜீவிகள் நக்சல்களை சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வின் விளைவாகப் பார்க்கிறார்கள். அறிவுஜீவிகள் நக்சல்களை பிரச்சனையாகப் பார்க்காமல் தீர்வாகப் பார்க்கிறார்கள். நீதிபதி M.N.ராவ் “நாம் எப்பொழுதும் நக்சலிசத்தைப் பிரச்சனையாகத்தான் பார்க்கிறோம். சிலர் அது சட்ட ஒழுங்குப் பிரச்சனை என்றும், சிலர் சமூக பொருளாதாரப் பிரச்சனை என்றும் புரிந்து கொள்கிறோம். ஆனால் மக்கள் அதை பிரச்சனையாகப் பார்க்காமல் தீர்வாகப் பார்க்கிறார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உண்மையில் இது பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம். நிலப்பகிர்வு என்பது மக்களுக்கு குறுகிய காலத்திற்கு பயன்படும் ஒரு பொருளாதாரத் திட்டம் மட்டுமே. அது மட்டுமே தீர்வாகாது. அரசியல் அதிகாரம் மக்களிடம் இருப்பது மட்டுமே சரியான தீர்வு.
கே: பசுமை வேட்டைக்கு எதிராக அறிவுஜீவிகள் அளவுக்கு பொதுமக்கள் திரளாக பங்கேற்கவில்லையே. இது மாவோயிஸ்டு இயக்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விட்டதைக் குறிக்குமா?
ப: இது தவறான தகவல். பசுமை வேட்டையை எதிர்த்து மக்கள் திரளாகப் போராடினார்கள். ஆந்திரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் முதலிய மாநிலங்களில் வெகுஜன மக்கள் போராடினார்கள். போராடவில்லை என்பது தவறான தகவல்.
கே: மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு கிராமப்புறங்களில் இருப்பதைப் போன்று நகரங்களில் ஆதரவு இருப்பது இல்லையே, ஏன்?
ப: இல்லை. நக்சல்பாரி இயக்க ஆரம்பகாலகட்டங்களை விட அதிகமாக வளர்ந்திருக்கிறோம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது வர்க்கப் போராட்டம் என்பதோடல்லாமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக உள்ளதால் தேசியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காந்தியவாதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம். நிலமற்ற தொழிலாளர்கள் மட்டுமல்ல தேசிய முதலாளிகளும் ஆதரவு தருகிறார்கள். இது தான் உண்மை.
கே: பெரும்பாலும் நிலமற்ற விவசாயக் கூலிகள் தலித்துகளாக இருக்கிறார்கள். இவர்களுடைய உரிமைக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
ப: சுயமரியாதை, நிலம், தீண்டாமை ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தலித் அமைப்புகள் சுயமரியாதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கோவில் நுழைவுப் போராட்டம் நடத்துவதை விட கோவில், மடங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களைக் கைப்பற்றி அதை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். ஏனென்றால் சுயமரியாதை தானாக வருவதில்லை. அது நிலத்தோடுதான் வருகிறது.
கே: செப்.11க்குப் பிறகு அனைத்து ஆயுதப் போராட்டங்களும் பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகின்றன. இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
ப: இதற்கு என் கவிதையை பதிலாக்குகிறேன்.
“நேற்று வெள்ளை மனிதன் பகத்சிங்கை பயங்கரவாதி என்றான்
இன்று கருப்பு மனிதன் நக்சல்பாரியை பயங்கரவாதி என்கிறான்
நாளை உலகம் இவர்களை இருண்ட வானின் சிவப்பு நட்சத்திரம் என்பார்கள்”.
உலகமய சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்படுவார்கள். எதிரிகள் எங்களுக்குக் கொடுக்கும் பெயர் பற்றி கவலையில்லை.
கே: ஆனால் பகத்சிங் காலத்திற்கும் தற்போதைய உலகமய காலத்திற்கும் வேறுபாடு உள்ளது. உதாரணமாக, நடுத்தர மக்கள் உலகமய சூழலில் சிறு அளவில் பயனடைந்துள்ளனர் அவர்கள் நடுத்தர வர்க்க பாதுகாப்பை, அமைதியை, நிம்மதியை வேண்டுகின்றனர். நீங்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டுள்ளீர்கள். அவர்களை எவ்வாறு வெல்வீர்கள்?
ப: உண்மையில் நடுத்தர மக்கள் மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகள் எனக் கருதவில்லை. உலகமயமாக்கலில் சிறிய அளவில் நன்மை அனுபவித்த பிறகு அவர்கள் அந்நியப்பட முயற்சித்தார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அவர்கள் நெருங்கி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மக்களின் வெறுப்பு அதிகமாகி 1930 இருந்தது போல் திரும்பிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் அரசு பாசிச மயமாகி வருகிறது. அது இந்திய அரசானாலும் அமெரிக்க அரசானாலும் சரி. பெரும்பான்மையான மக்கள் அரசுகளின் இந்தப் போக்கை எதிர்க்கின்றனர்



நன்றி : கீற்று மற்றும் சே  vijay254@gmail.com

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி