படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

31 ஆக., 2011

நார்வே குண்டுவெடிப்பு மறைக்கப்பட்ட தகவல்கள்!


ஜூலை 22ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐரோப்பாவை மட்டும் அல்ல உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது மீண்டும் ஒருமுறை தீவிரவாதம், பயங்கரவாதிகள் என்ற வாசகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இடமும் ஆட்களும் தான் வேறு வேறு.


சரியாக வெள்ளிக்கிழமை மதியம் அரசு அலுவலகங்களை குறிவைத்தே இந்த குண்டுவெடிப் புகள் நிகழ்த்தப்பட்டன. குண்டு வெடிப்பில் ஏழு பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து சிலமணி நேரங்களில் ஆளும் கட்சி கூட்டத்தில் தீடீரென தோன்றிய ஒரு மர்ம மனிதன் சரமாரியாக சுட்டுத் தள்ளி 80க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தான். குண்டுவெடிப்பு நடந்தவுடன் இந்த செயல் நிச்சயம் அல் கைதாவின் வேலையாகத் தான் இருக்கும் என ஊடகங்கள் புறப்பட்டன.

நார்வேயில் ரொம்ப கால மாக இருக்கும் உள்ளூர் பாகிஸ்தானியர்கள் தான் இந்த செயலுக்கு காரணமாக இருக்கும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கருத்துக்கள் பரவின. அவை பரவின என்பதைவிட பரப்பப்பட்டன என்பதே நிஜம்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் 10க்கும் குறைவானவர்கள் என்ற தகவலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 90பேர் கொல்லப்பட்ட தகவலும் வெளியாக வழக்கமாக உப்பு, புளி, மிளகாய் தூள் சேர்த்து காரசாரமாக கதை வசனம் எழுதி பட்டையை கிளப்பும் புளுகு பரப்பும் பல ஊடகங்கள் சோர்வடைந்தன.

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அவங்களே தான். சந்தேகமில்லை அவர்கள் தான் என கீறல் விழுந்த ரிகார்ட்டுகளாக புலம்பியவர்கள் நொந்து போனார்கள்.

நார்வே குண்டுவெடிப்பு ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் தீவிரத்தினை காட்டுகிறது என முதல் நாள்நீட்டி முழக்கியவர்கள் மறுநாள் சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மட்டுமே வாய்திறந்தார்கள்.

நார்வே குண்டுவெடிப்பின் தகவல் முடிச்சுகள் ஒவ்வொன் றாக அவிழ அவிழ புளுகு பட்டாளத்தின் நிலைமை பரிதாபகரமாய் அமைந்தது. துப்பாக்கியால் சுட்டவன். ஒரு நார்வே நாட்டுக்காரன். வலதுசாரி கொள்கையுடையன். ஒரு தீவிர கிறித்தவன். 32 வயதான ஆண்டர்ஸ் பெஹரிங் பெலிவிக் என்பதே அவன் பெயர்.

அவ்வளவுதான் சதிகாரன் வெள்ளைக்காரன் என்றவுடன் அவனுடைய மூதாதையார் எந்த இனம் என்பதை பற்றியெல்லாம் கூட சிலர் ஆய்வில் ஈடுபட்டார்கள். அதை வைத்தாவது அவன் எந்த நாட்டுக்காரன் என்பதை வைத்து நாம் நினைத்ததுபோல் பொய்களை பரப்பலாம் என நினைத்தவர்களுக்கு சரியான ஏமாற்றம் காத்திருந்தது.

அதில் சிலபேர் கொஞ்சம் அதிகமானவே புதிய பரப்புரை யை தொடங்கினார்கள். அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை காரர்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் கதை பரப்பல் நடந்தது.


இப்படி புளுகுகளை பரப்பமுடியாதவர்கள் தங்கள் முயற்சிகளில் தோற்றுப்போன தோடு, பிரச்சினையின் தீவிரத்தை முனை மழுங்கச் செய்யும் வேலையிலும் கூர்மையாக இறங்கினார்கள்.


சதி செய்தவன் முஸ்லிம் என கதை பரப்பமுடியாததால் எக்கேடோ கெட்டு போகட்டும் என்ற எண்ணத்துடன் துப்பாக்கி சூடு நடத்தியன் ஒரு பைத்தியக்காரன் என கற்பனைகளை கருத்துக்களாக பரப்பிவிட்டு அமைதிகாக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் நிகழ்த்தப்பட்ட சதிமி கவும் பயங்கரமானது, அமைதி யையும் சமாதானத்தையும் என்றை க்கும் நார்வேயில் தீவிர வலதுசாரி குழுக்கள் புதிய நாசிச கொள்கை கொண்டவர்கள் தீவிர குணம் கொண்டவர்கள் நார்வேயில் பெருகிவருவதன் அறிகுறியே இந்த குண்டு வெடிப்பு என தெரிய வந்துள்ளது.

நார்வே நாடு இந்த பூமிப்பந்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நாடாகும் சுவிட்சர்லாந் தைப் போல அல்லாமல் உண்மை யிலேயே அமைதியை நேசிக்கும் நாடு நார்வே ஆகும்.

நமது அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக் கும் அரசாங்கத்திற்கும் இடையி லான பேச்சுவார்த்தையில் நார்வே முக்கியப்பங்கு வகித்தது. உண்மையில் இன அழிப்பு போர் நடைபெறக்கூடாது என பாடுபட்ட நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக்சோல்ஹிமை மறக்கமுடியுமா? என்ன?

எனினும் இலங்கை சமாதான பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நிலையை கருணையுடன் பார்த்தது நார்வே தூதுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பிடிக்காத சக்திகள் ஏதும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடுமா? என்ற ஐயப் பாட்டில் விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்பதே சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியாக கருதப் படும் ஆண்டர்ஸ் கடும் தீவிர கொள்கை கொண்டவன். இவனின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்களில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் அவனது எண்ண ஒட்டத்தை காட்டியுள்ளன. ஒரு மதநம்பிக்கையாளன் ஒரு லட்சம் வீரர்களுக்கு சமமானவன் என்றும் ஒரு வாசகம் அதில் இருக்கிறது.

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுத்து கொச்சைப்படுத்திய நெதர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் குர்ஆனை இழிவுபடுத்தி 'ஃபித்னா' என்ற டாகுமெண்டரி படம் எடுத்து பலத்த சர்ச்சைக்குரியவனாகக் கருதப்பட்ட கீட்வைல்டர்ஸ் முக்கிய முஸ்லிம் எதிர்பாளர்களை தனது உற்றநண்பர்களாக கொண்டி ருக்கும் இந்த வெள்ளைக்கார பயங்கரவாதி தன்னை நார்வேயின் தேசிய வாதியாக காட்டிக்கொண்டு தனது முழக்கத்தினை சர்வதேசி யவாதத்திற்கு எதிரான தேசிய வாதிகளின் உரிமைப்போர் என வெறித்தனமாக கூறியுள்ளான்.

சர்வதேச அளவில் தற்போது கம்யூனிசமும் உலகில் ஆதிக்கம் செலுத்தவில்லை முதலாளித் துவம் என்று அழைக்கப்படும் காபிடலிஸமும் ஆதிக்கம் செலுத்த வில்லை. தற்போது உலகளாவிய கொள்கையாக நுகர்வோர் கொள்கை என்ற கன்ஸ்யூமரிசம் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. கம்யூனிஸத்தையும் கேபிடலிஸத் தையும் பின்னுக்கு தள்ளி கன்ஸ்யூமரிசம் முன் வரிசைக்கு வரத்தொடங்கியதில் இருந்து தொழிலாளர்கள், வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி போன்றவை அனைத்தும் நுகர்வோர் நலனுக்காகவும், நுகர்வோர் லாபத்துக்காகவும் மட்டுமே என்ற லட்சியம் முழங்கப்பட்டது. குறைந்த செலவில் நிறைந்த உழைப்பு வரவேற்கப்பட்டன. குறைந்த பதவியில் நிறைந்த கடமைகள் வழங்கப்பட்டன.

குறைந்த அளவு ஊதியத்தில் அதிக பொறுப்பு சுமையுடன் கூடிய பணிகளுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பெருமளவு வந்தனர். மேற்குலகில் பெரும்பான் மையினராக வாழும் வெள்ளைக் காரர்களுக்கு அவர்கள் நாட்டிலே யே வாய்ப்புகள் குறையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஏற்கனவே நிற வெறியால் பெரும் ஆத்திரம் கொண்டு வாழ்ந்த வெள்ளையர்களுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாட்டில் வந்து தங்களது வேலை வாய்ப்புகளை பறிக்கி றார்கள் என்ற அச்சம் அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி வெள்ளையர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்குவது போல் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் தங்கள் சமயசெழுமையையும், பண்பாட்டையும் பேணத்துவங்கி யதையே ஏதோ நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்பதைப் போல் மேற்குலக ஆதிக்கவாதிகள் எண்ணத் தொடங்கியதன் விளைவு ஆண்டர்ஸ் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியுள்ளது.

அதனால் சமரச கருத்தாளர் களுக்கும் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக நியோ நாஜிக்களும், போலி தேசியவாதிகளும் ஐரோப் பிய உள்ளிட்ட பகுதிகளில் இந்த அபாய நிலை அதிகரித்து வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் நியூநாஜிக்கள், மற்றும் தேசிய வாதிகளின் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மறைமுக மிரட்டல்களுக்கு பணிந்து வரும் நிலையில் நார்வேயின் செயல்பாடு நெஞ்சுரம் மிக்கதாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
பாலஸ்தீன விடுதலைக்கு அங்கீ காரம் வழங்க வேண்டும். ஆக்கிர மிப்பு இஸ்ரேலின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அளவில் நார்வேயின் இளைஞர்கள் குறிப்பாக தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதையும் இஸ்ரேலை கண்டிப்பதையும் ஒரு கொள்கைப் பிரகடனமாக செயல்படுத்தத் தொடங்கியதால் யூத சக்திகளுக்கு மட்டுமின்றி, மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் வெள்ளைநிற வெறியர்களுக்கும் அது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

நார்வே தற்போது நேட்டோ கூட்டமைப்பு என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்ட நேட் டோ படைகளில் நார்வேயின் துருப்புகளும் அங்கம் வகித்தன.
லிபியாவை சிதைக்க அனுப்பப் பட்ட நேட்டோ படையணியிலும் நார்வேயின் படைகள் இருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் நேட்டோ படைகள் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அமைதி ஆர்வலர் களான நார்வே நாட்டை வேதனையுற செய்தது.

நேட்டோ படைகளின் மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படு கொலைகளுக்கும் எத்தனைகாலம் தான் ரத்தசாட்சியாக இருப்பது என்ற சுய ஆவேசத்தின் விளைவாக இதுவரை லிபியாவின் அப்பாவி மக்களின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய நார்வே போர் விமானங்கள் குண்டுகளை வீசவே வீசாது என அறிவித்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நார்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசாது என அறிவித்திருக்கிறது.
நார்வேயின் பாலஸ்தீன ஆதரவு சமாதான முன் முயற்சி கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கை அடைந்த நேட்டோ கூட்டமைப்பு நார்வே மீது நடத்திய தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

நேட்டோ கூட்டமைப்பு தங்கள் அணியில் இருந்து விலகி சமாதானம் மனித நேயம் எனப் பேசி கூட்டு நாடுகள் எதுவும் உருப்பட்டுவிடக்கூடாது என்ற கொடிய எண்ணத்துடன் நேட்டோ அமைப்பே நிலிகிஞிமிளி என்ற ரகசிய பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. அது பிரிந்து விட நினைக்கும் உறுப்பு நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாம் வளைகுடாப் போரில் ஈராக்குக்கு எதிராக வான்தாக்குதல் தொடுப்பதில் இருந்து விலகி நியாய உணர்வுடன் நடந்து கொண்ட இத்தாலிக்கு எதிராக அவ்வப்போது இத்தாலியில் குண்டுவெடிப்புகளை நடத்துவது நிலிகிஞிமிளி பயங்கரவாதக் குழுவின் வேலையாகும்.
ஆம் சமாதான ஆர்வலர்களின் நாடான நார்வேக்கு இன்று நிகழ்ந்துள்ள இழப்புக்கு கூட நிலிகிஞிமிளி பின்னணியில் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் அது விரைவில் மறைக்கப்பட்டுவிடும். பாவம் நெதர்லாந்து மக்கள்.

-அபூஸாலிஹ்

அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்



அன்னா ஹசாரே யின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னிய நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்பரிவார பயங்கரவாத இயக் கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தாராளமாக செலவழிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் கள் தெரிவிக்கின்றன.

ஹசாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு அந்நிய நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹசாரேவின் போராட்டத்தை பிரபலப்படுத்த செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹசாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஹசாரேவின் போராட்டத்திற்கு வலைதள உலகிலும் செயற்கையான எழுச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடி போன்றோரும் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹசாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியைக் கொலை செய்த தேசத்துரோக ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவை உள்ளன. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹசாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹசாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்பரிவார் அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால், ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹசாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடு செய்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.

ஹசாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹசாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப் போவதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.

முன்பு கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது. தற்போது காந்தியவாதி வேடத்தில் அன்னா ஹசாரே காங்கிரஸ் எதிர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார். இது காவி முகாம் எழுச்சிபெற நடைபெறும் மறைமுக சதித்திட்டமாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=1399:2011-08-24-15-36-40&catid=82:indiia&Itemid=199

14 ஆக., 2011

கட்டாய திருமண சட்டமும் இசுலாமிய எதிர்ப்பும்


உலகலாவிய இசுலாமிய எதிர்ப்பு என்பதுதான் இந்த நூற்றாண்டின் முற்போக்கு சிந்தனை என வல்லரசு நாடுகளும், இந்தியா போன்ற அமெரிக்க அடிமை நாடுகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான தொடர் தாக்குதல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்.
உலக கொடுங்கோலன் ஜார்ஜ் புஸ், தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இஸ்லாமிய எதிர்ப்பினை இன்னொரு சிலுவை யுத்தம் என பிரகடனப்படுத்தி முடுக்கிவிட்ட பணி, இன்று உலகம் முழுவதும் அமெரிக்க நட்பு நாடுகளின் முதல் முக்கிய பணியாக செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்க மற்றும் அடிமை நாடுகளில் ஒரு மதத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் பேரழிவு வேலைகளை நியாயப்படுத்தும் விதமாக தீவிரவாத ஒடுக்குமுறை, நாட்டின் பாதுகாப்பு என்ற வேறு பெயர்களில் மனித உரிமைகள் மீறப்படுகிறது. இந்த பிரச்சாரங்களினால் நடுநிலையாளர்களையும், முற்போக்குவாதிகளையும் வெகுஜனங்களையும் தனது நிலை குறித்து நியாயப்படுத்துகின்றனர். இதற்காகவே உலகலாவிய செய்திகளும் தயாரிக்கப்படுகின்றது. இந்தத் தொடர் பிரச்சாரங்களால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வுகளை உற்பத்தி செய்து இசுலாமியர்களின் மேல் வெறுப்பு அலைகள் உருவாக்கப்படுகிறது.
இசுலாமியர்களை மட்டும் தனி சோதனை எனும் பெயரில் பொது இடங்களில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தி மன அளவில் காயப்படுத்துவது என்பது அமெரிக்கா தொடங்கி இன்று எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புவி வெப்பமயமாதலை விட மிக முக்கிய அச்சுறுத்தலாக இசுலாமியப் பெண்கள் அணியும் புர்கா - பாரம்பரிய உடைகளை மேலை நாடுகள் தடை செய்கின்றன. புர்கா அணியும் பெண்கள் எல்லோருமே உடம்பில் வெடிகுண்டுடன் இருப்பவர்கள், தொப்பி, தாடி வைத்திருக்கும் ஆண்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்பது போன்ற உணர்வினை மக்கள் மத்தியில் திட்டமிட்டே எல்லா ஊடகங்களும் செய்து வருகின்றன. ஒரு மதத்தைச் சார்ந்த குழந்தைகளின் அருகில் தங்கள் குழந்தைகளை அமர்த்த வேண்டாம் என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தில் கேட்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி குழந்தைகளிடம் கூட மதத்தின் பெயரால் பகைமை பாராட்டுவது என்பது எத்தனை இழிசெயல்.
இது ஒரு மதத்தவரை மட்டும் சமுக ஓட்டத்திலிருந்து பிரித்து அன்னியப்படுத்தும் முயற்சியாகும். அவர்களின் மத சம்மந்தப்பட்ட எந்த ஒரு அடையாளமும் சமுகத்தின் அச்சுறுத்தலாக கருத வைப்பது, அவர்களை சுய குற்றவுணர்வு உள்ளவர்களாக்கி ஒட்டுமொத்த மக்களின் பார்வையிலும் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்ற நிலைக்கு உட்படுத்துவது தான் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நோக்கமாகும்.
இந்த முயற்சி இந்தியாவிலும் இந்துத்துவா எனும் உட்கருவுடன் நாட்டின் கட்டமைப்புகளில் எல்லா நிலைகளிலும் இசுலாமிய அழிப்பு வேலைகளை செய்து வருகிறது. அதை நம் நாட்டில் நடக்கும் போலி என்கவுண்டர்கள், ஆள்கடத்தல்கள், மதக்கலவரங்கள், வழிபாட்டு நிலையங்களை அபகரித்தல், நீதி மறுத்தல், இட ஒதுக்கீட்டில் புறக்கணித்தல், வாழ்வுரிமை மறுக்கப்படுதல் என ஒரு மதத்திற்கு எதிராக பல்முனை தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
இசுலாமியர்களின் சமுக உரிமைகளில் இந்திய நீதித் துறையின் நிலைபாடுகளும் பல இடங்களில் விஷத்தைக் கக்குவதாகவே உள்ளது.
"பிரதியும் சாவான், வாதியும் சாவான் ஆனால் வழக்கு மட்டும் தலைமுறை கடந்து நிலுவையில் இருக்கும்” என கேலி செய்யும் அளவிற்கு நாட்டில் எத்தனையோ லட்சம் வழக்குகள் நிலுவையில் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, சில நீதிபதிகள் எப்பொழுதாவது அரசுக்கு அறிவுரை கூறுவதும் உண்டு. அதில் ஒன்றுதான் கட்டாய திருமணச் சட்டம். ஏற்கனவே திருமணங்களைப் பதிவு செய்யும் இசுலாமிய சமுகத்தினர் இதை எதிக்கும் அவசியம் என்ன இதுவும் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் போலத்தானே என சில கற்றறிந்தவர்களும் கூறிவருகின்றனர்.
உண்மை தான் பிறப்பும், இறப்பும் எந்த ஒரு மாற்றம் இல்லாதது. ஒருவன் இந்த உலகத்தில் பிறந்து விட்டான் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை போல் ஒருவன் இந்த உலகத்தை விட்டு மரணித்தாலும் அதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்த இரண்டு விசயங்களுக்கும் கட்டாயப் பதிவுகள் இருப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் திருமண உறவுகளுக்கு பதிவு சட்டங்கள் என்பது அதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அவசரமாக சட்டம் அமுலாக்கப்பட்டதன் நோக்கத்தினையும் மனதில் கொண்டு யோசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த சட்ட அறிவுரைகளை உடனடியாக அமுல்படுத்திய மாநிலங்களில் முதன்மையானது இசுலாமியர்களைப் பொது எதிரியாய்க் கருதும் மோடியின் குஜராத் தான். இதில் தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த அவசர ஆர்வம் எனத் தெரியவில்லை.
ஒரினச்சேர்க்கைவாதிகளும் திருமணம் செய்துகொள்ளலாம் என சட்டம் இயற்றபடுகிறது. விரைவில் மிருகத்திற்கும் மனிதனுக்கும் திருமணம் செய்யலாம் எனவும் சட்ட்ங்கள் தீட்டலாம். ஆனால் மிகவும் பண்பாட்டுடன் மற்ற எல்லாருக்கும் முன் மாதிரியாய் நடக்கும் இசுலாமிய தனியார் திருமண சட்டத்தினால் பெரிய பேரிழப்பு வருவதுபோல கட்டாய பதிவுச் சட்டம் உடனடியாக அமுலாக்க வேண்டும் என்ற அவசர ஆர்வம்தான் ஏன்?
மணமகன், மணமகள், தாய், தந்தை சாட்சிகள், உறவுகள் என எல்லாரும் கூடி அரசு காஜியின் பதிவு ஒப்பந்தத்துடன் பதிவு செய்து நடத்தி வைக்கப்படும் ஒரு திருமணத்தை ஒரு சார்பதிவாளர் சரிபார்த்து இந்தத் திருமணம் செல்லும், செல்லாது என தீர்மானிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? லஞ்சம், அலட்சியம், அதிகாரம் என ஊறிப்போய் உள்ள அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டால் என்னவாகும் நிலைமை? ஏற்கனவே போதிய கல்வி இல்லாத, பொருளாதாரத்தில் தாழ்வு நிலையில் இருக்கும் இசுலாமிய சமுகம் இதை எப்படி எதிர் கொள்ளும்?
திருமணமாகிய 90 நாட்களுக்குள் முறைப்படி திருமணச் சான்றிதழ் பெறவேண்டும், அப்படி இல்லையென்றால் அந்தத் திருமணம் செல்லாது என சார்பதிவாளரால் அறிவிக்கப்பட்டால், திருமணமாகிய 90 நாட்களில் புது தம்பதிகள் குடும்பம் நடத்தி, மணப்பெண்ணும் கருவை சுமக்கும் நிலையில், ஒரு பதிவாளர் இந்தத் திருமண உறவு செல்லாது எனக் கூறிவிடமுடியுமா? இல்லை கருவில் இருக்கும் குழந்தையின் தகப்பன் இவன் இல்லை என்று கூறிவிடமுடியுமா?
ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் சாதாரணமாக ஒரு ரேசன் கார்டு பதிய வேண்டும் என்றோ, இல்லை உறுப்பினர் நீக்கவோ, சேர்க்கவோ நாம் படும்பாடு நமக்குத்தான் தெரியும். ரேசன் கார்டில் ஆரம்பித்து, சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் என அரசு அலுவலகங்களுக்கு அலைந்து, அலைந்து நாம் ஒரு வழியாகிவிடும் சூழலில், போதாக்குறைக்கு திருமணப் பதிவு சட்டம் வேறு.
இப்பொழுது தாராளமாக சாட்சிக் கையெழுத்து போட முன்வரும் இசுலாமிய சமூகத்தார்கள் இந்த சட்டம் வருமேயானால் சாட்சி கையெழுத்துப் போட தயக்கம் காட்டுவார்கள். சார்பதிவாளர் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கும் வரைக்கும் மணமக்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து சாட்சி கையெழுத்துப் போட்டவனும் இது சரியில்லை, அது சரியில்லை என பதிவாளர் அலுவலகம் நோக்கி அழைய வேண்டிவரும்.
பெண் குழந்தைகள் அதிக விகிதாச்சாரம் உள்ள, வறுமை சூழலில் இருக்கும் சமுகம் திருமணப் பந்தங்களை மணமகன், மணமகளின் உடல் மன முதிர்சியின் அடிப்படையில் திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இதில் சில நேரங்களில் அரசாங்கம் சொன்ன வயது வரம்பினை அடைவதற்கு முன்னமே திருமணங்கள் நடக்கும் சூழலும் உள்ளது. பொதுவாக அதிக பெண் குழந்தைகள் இருக்கும் வறுமையான குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் மற்ற பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு அரசு நிர்ணயம் செய்த திருமண வயதிற்கு முன்னமே திருமணம் செய்யும் பழக்கங்கள் மற்ற மதத்தினர் போலவே இசுலாமியர்கள் மத்தியிலும் உள்ளது.
கட்டாய திருமணப் பதிவு சட்டம் என்று கொண்டு வந்தால் அதன் மூலம் இது போன்று முடிந்த திருமணங்களை செல்லாது என அறிவித்து விடுமா? பலதார மணம் புரியும் இசுலாமியர்களுக்கு எத்தனை முறை பதிவுகள் நடக்கும்? பொது சட்டத்தினை ஏற்றுக் கொண்டு வாழும் இந்திய இசுலாமியர்கள் திருமணம், சொத்துரிமை, வாரிசு, மண விலக்கு, அனாதைகள் பேணுதல், பொது நிதி சம்பந்தபட்ட 10 வகையான விசயங்களில் மட்டும் இசுலாமிய தனியார் சட்டத்தினைப் பேணுகின்றனர்.
ஒரு இசுலாமியர்களின் தனிமனித ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையில் மட்டும் கடவுளின் சட்டங்கள் எனக் கருதும் இந்த 10 விதமான சட்டதிட்டங்களை சுமார் 1341 வருடங்களாக எந்த காலகட்டத்திலும் ஒரு சிறு மாற்றம் கூட இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாகவே ஆங்கிலேயன் காலத்திலேயே இசுலாமியர்கள் அவர்கள் மத வழி தனியார் சட்டங்களை கடைபிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பிறகும் தனியார் சட்டங்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் இந்திய சட்டங்கள் இசுலாமியர்களுக்கு வழிவகை செய்துள்ளது.
இசுலாமியர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமாக இறைவனின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக வாழும் சூழலில் இது போன்ற திடீர் திடீர் தலையிடுகள், சட்ட மறுபரிசிலனை போன்றவைகள் தங்களின் மத உரிமைகள் அனைத்தையும் பறித்து பொது சிவில் சட்டம் என்ற நிலைக்குள் இட்டுச் சென்றுவிமோ என்ற அச்சம் இயல்பாகவே உள்ளது.
இன்றைய சூழலில் இந்துத்துவா வர்க்கவாதிகளின் கோரிக்கையும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதேயாகும். அதன் பிரதிபலிப்புகள் சில சமயங்களில் பார்ப்பனிய சாயம் உள்ள எல்லா கட்டமைப்புகளிருந்தும் இசுலாமிய எதிர்ப்பினை பல்வேறு முனைகளில் நடத்திக் கொண்டுள்ளது.
சுமார் 800 வருட இசுலாமிய ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரு இசுலாமியாரும் இல்லாமல் அழிக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் முதன் முதலில் இயற்றப்பட்ட சட்டமே திருமண சட்டம் தான். இதற்குப் பின்னர் 70 வருடங்களில் ஸ்பெயினில் ஒருவர் கூட இசுலாமியர்களாய் இல்லை எனும் அளவிற்கு அந்த நாட்டிலிருந்து முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டனர். பார்ப்பனஆரியன் ஆளப்போகும் அகண்ட பாரத கனவிற்கு ஸ்பெயினை முன்னுதாரணம் எடுத்தால், இந்திய முசுலிம்களும் அதே ஸ்பெயினில் இருந்து படிப்பினை பெறத்தான் வேண்டும்.
கட்டாய திருமணச் சட்டம் இசுலாமிய கூட்டு சமுகத்தினை தகர்க்கும் முயற்சி. சாட்சிக்கு மட்டும் ஆளிருந்தால் போதும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என பள்ளிவாசலுக்கும் இசுலாமியனுக்குமான உள்ள தொடர்பை துண்டிக்கும் செயல். அரசியல் கட்டமைப்புகளில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு சமுகத்திற்கு ஜமாத் என்ற சமுக கூட்டமைப்பின் மூலமாகத்தான் ஒற்றுமையுடன் தங்களது வாழ்வுரிமைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்த கூட்டமைப்பும் தகர்க்கப்படுமானால் இசுலாமியர்கள் இந்த நாட்டில் முழுவதுமாய் சிதறடிக்கப்பட்டு, வாழத் தகுதியற்ற சமுகமாய் ஆகிவிடும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த இளைஞர்களால் நாடு அமைதியின்மையை எதிர்கொள்ள நேரலாம். இந்த அச்சம் மிகைபடுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், சம காலத்திய தொடர் நிகழ்வுகளின் ஒருங்கிணைந்த போக்கு இந்த அச்சங்களை உறுதிசெய்கிறது.
சட்டசபையில் இந்த சட்டம் கொண்டுவரும்போது அதை எதிர்த்து கருத்து சொல்லக்கூட முடியாத ஒரு சமுகமாகத்தான் இருந்தது. ஆனால் ஜமாத் எனும் சமுக கூட்டமைப்பின் தொடர் முயற்சியால் முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்வதாக சமீபத்தில் கூறியுள்ளது சற்று ஆறுதலான செய்தியாகும்.
இசுலாமிய சமுகம் அரசியல்,அதிகார கட்டமைப்புகளுக்குள் நுழையாதவரை இது போல பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து சந்திக்க வேண்டிவரும்.
-இராசகம்பீரத்தான் மால்கம் X ( FarookMo@hcl.in)

9 ஆக., 2011

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !

தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தை நெருங்கிவிடாதபடி சாதி-அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறவர்தான் இந்த பார்ப்பன பாசிச ஜெயா.
“ஜெயாவின் ஆட்சி என்றாலே நிர்வாகத் திறமைமிக்க ஆட்சி; சட்டம்ஒழுங்கைக் கண்டிப்புடன் பேணக்கூடிய ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சியோ இதற்கு நேர்மாறானதுசு என்றொரு கருத்தைப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டே நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன.
அ.தி.மு.க., சட்டசபைத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று அமைச்சரவையை அமைத்தவுடன், ஜெயாவின் சாணக்கியனான சோ ராமஸ்வாமி, “தடம் புரண்டுவிட்ட நிர்வாகத்தை மீண்டும் நிமர்த்துவது லேசான காரியம் அல்ல. அதைச் செய்து காட்டுகிற திறமை இவரிடம் உண்டு என்ற மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்த முதல்வர், அதை நிறைவேற்றி வைக்க முழுமையாக முனைந்திருக்கிறார்சு என “பில்ட்அப்சு கொடுத்து எழுதினார்.
முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜை அழைத்துவந்து, “புரட்ச்ச்சி தலைவிசு நடத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயத்தை மேம்படுத்துவது, மின் தட்டுப்பாட்டை மூன்று மாதங்களில் சரி செய்வது, மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது என்றெல்லாம் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஜூனியர் விகடன், “ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும் அறிகுறி இதுசு என அக்கூட்டத்தைப் புகழ்ந்து தள்ளியது.
பாடச் சுமையைக் குறைக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கூறிவருவதை, மாணவர்களிடமிருந்து புத்தகங்களைப் பறித்துவிட வேண்டும் என ஜெயா புரிந்து கொண்டிருக்கிறார் போலும். தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக புத்தகங்களே இல்லாமல் பள்ளிக்கூடத்திற்குப் போய் பொழுதைக் கழித்துவிட்டுவருவதே, ஒரு அசாதாரணமான நிர்வாகியிடம் தமிழகம் மாட்டிக் கொண்டிருப்பதைப் புரிய வைத்துவிடுகிறது. பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என அடம் பிடிக்கும் மாணவர்களைப் பார்த்திருக்கும் தமிழகம், பள்ளிக்கூட மாணவர்கள் புத்தகம் கொடுக்கக் கோரி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதை இன்று பார்க்கிறது. ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் மாணவர்கள் மத்தியில் இந்த ‘மாற்றத்தை’க் கொண்டு வந்திருக்கும் செல்வி ஜெயாவின் நிர்வாகத் திறமையை, அவரது துதிபாடிகள் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்கலாம்.
மாணவர்கள் வீதியில் இறங்கிப் புத்தகம் கேட்டுப் போராடும்பொழுது, ஜெயாவோ 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ள சமச்சீர் கல்வி நூல்களைக் கரையான் தின்ன விடுகிறார். இப்புதிய பாடநூல்களுக்குப் பதிலாக, காலாவதியாகிப் போன பழைய பாடத் திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட பாடநூல்களைக் கொடுத்துத் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்தப் போகிறாராம், இத்திறமைசாலி.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால், அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியாது என்ற நிலையிலும், அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என அறிக்கைவிடுத்துத் தனது அதிபுத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார், ஜெயா.
தமிழகத்தின் விவசாயத்தை மேம்படுத்த ஜெயாவிடம் சொந்த சரக்கு எதுவும் கிடையாது; குஜராத் பாணியை காப்பியடிப்பது என்பதுதான் அவரது திட்டம். இந்த குஜராத் பாணி மேம்பாடு என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை நிலங்களிலிருந்து சிறுகச்சிறுக அப்புறப்படுத்திவிட்டு அல்லது அவர்களை ஐ.டி.சி., ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாற்றிவிட்டு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதுதான். விவசாயத்திலும் தனியார்மயம்  தாரளமயத்தைப் புகுத்த வேண்டும் என்ற உலக வங்கியின் கட்டளையை நடைமுறைப்படுத்துவதுதான். எனவே, அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் விவசாய மேம்பாடு குறித்து ஜெயா கும்பல் நடத்திய ஆலோசனைகளை, தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சதி என்றுதான் கூற முடியும்.


மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்வெட்டை அமல்படுத்துவது என்ற புளித்துப்போன சூத்திரத்தைதான் இந்தத் திறமைசாலியும் பின்பற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டோடு, திடீர் திடீரென மின்சாரத்தை நிறுத்திவிடும் அறிவிக்கப்படாத மின்வெட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரம் மின் தடை அமல்படுத்தப்பட்டு வந்த நடைமுறை போய், ஜெயாவின் ஆட்சியில் மின்சாரம் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்ற நிச்சயமற்ற நிலை உருவாகிவிட்டதாகப் பொதுமக்களும், சிறுவீத உற்பத்தியாளர்களும் புலம்பும் அளவிற்கு மின்வெட்டு தீவிரமாகியிருக்கிறது.
மூன்று மாதங்களில் மின் பற்றாக்குறையைச் சமாளித்துவிடுவேன் என ஜெயா அடித்த சவடால் புஸ்வானமாகிப் போய்விட்டதால், புதிய திட்டங்களின் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமை சீராகி விடும் என இப்பொழுது பீற்றி வருகிறார். இந்தப் புதிய திட்டங்கள் தனது ஆட்சியின் பொழுது தீட்டப்பட்டு, அவற்றின் கட்டுமானப் பணிகள் அப்பொழுதே தொடங்கப்பட்டதாக உரிமை பாராட்டுகிறார், கருணாநிதி.
தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? யார் அதனைத் தீர்க்கப் போகிறார்கள்? என்பது குறித்து அய்யாவும், அம்மாவும் எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் அதே சமயம், இவ்வளவு மின் பற்றாக்குறை நிலவும் சமயத்திலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரம் வழங்குவதில் மட்டும் முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கும், இந்நாள் அ.தி.மு.க. ஆட்சிக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை.
“கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீடு நிறுவனமும்தான் பயன் பெறுகின்றன. காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்குத் தருகின்ற நிதியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தலாம்சு என கவர்னர் உரையிலேயே அறிவித்தார் ‘புரட்ச்சித் தலைவி’. தான் அறிவித்ததைத் தானே ஓரம் கட்டிவிட்டு, பழைய கள்ளு புதிய மொந்தை என்ற கணக்காய், புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்திருக்கிறது, ஜெயா அரசு. தி.மு.க. அரசு தனியார் காப்பீடு நிறுவனத்திற்குக் கொட்டிக் கொடுத்ததைவிட நான்கு மடங்கு அதிகமாகக் கொட்டிக் கொடுக்கப் போகிறது, இப்புதிய காப்பீடு திட்டம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்த கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் என்ற தனியார் காப்பீடு நிறுவனம் 400 கோடி ரூபாய் இலாபம் அடைந்ததாகவும், அதிலொரு பங்கு கருணாநிதி குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டி வந்தார், ஜெயா. இன்னும் ஓரிரு மாதங்கள் போனால், புதிய காப்பீடு திட்டத்தின் மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனம் இலாபத்தைச் சுருட்டப் போகிறது, அதிலொரு பங்கு அ.தி.மு.க.வைக் கட்டுப்படுத்தும் எந்தக் குடும்பத்திற்குப் போய்ச் சேரப் போகிறது என்பதும் தெரிந்துவிடும்.
ஜெயா அறிவித்திருக்கும் மற்ற இலவசத் திட்டங்களும்கூடக் குளறுபடிகளும், சர்ச்சைகளும் நிறைந்ததாகதான் தீட்டப்பட்டுள்ளன.“மாதமொன்றுக்கு 1 இலட்சம் கிரைண்டர்கள்தான் தயாரித்து வழங்க முடியும்சுஎன கோவையைச் சேர்ந்த கிரைண்டர் உற்பத்தியாளர்கள் அரசுக்குத் தெளிவுபடுத்தியிருந்த பிறகும், இந்த டெண்டரைக் கோரும் நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 25 இலட்சம் கிரைண்டர்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது, ஜெயா அரசு. சீன நாட்டு கிரைண்டர்களை இறக்குமதி செய்து விற்கும் வட இந்திய வியாபாரிகளிடம் டெண்டரை ஒப்படைக்கும் நோக்கம் இந்த நிபந்தனையின் பின் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தற்பொழுது எழுப்பியுள்ளனர்.
இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்திய தி.மு.க. அரசு, அதற்காக டெண்டர்களைக் கோரியபொழுது, வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டதாகவும், அ.தி.மு.க. அரசு இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் திட்டங்களுக்காக டெண்டர் கோரும் விஷயத்தில் முந்தைய ஆட்சியைப் போல வெளிப்படைத் தன்மையோடு நடக்கவில்லை என்றும் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள்கூட குற்றஞ்சுமத்தி வருகின்றன. இதன் பொருள் இந்த இலவசத் திட்டங்களில் கமிசன் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை அ.தி.மு.க. திறந்துவிட்டுள்ளது என்பதுதான்.
கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத் தனது தேர்தல் அறிக்கையில் ஜெயா அறிவித்தபொழுதே, மலிவான விலையில் மாட்டுத் தீவனம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தாமல் மாடு வழங்குவது, கிராமப்புற ஏழை மக்களை மேலும் கடனில் மாட்டிவிடுவதில் முடிந்துவிடும் எனப் பலரும் சுட்டிக்காட்டினர். “அதனாலென்ன, மாடு வழங்கும் திட்டத்தோடு, மாட்டுத்தீவன உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தையும் சேர்த்து அறிவித்தால் தீர்ந்தது பிரச்சினைசு எனக் கோமாளித்தனமாக முடிவெடுத்து இத்திட்டத்தை ஜெயா அரசு அறிவித்திருக்கிறது.
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், அத்திட்டம் ஏழைக் குடும்பங்களை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமாகத் தெரியவில்லை. வெறும் விளம்பரத்திற்காகவோ அல்லது ஏழைகளின் பெயரைச் சொல்லி அ.தி.மு.க. கும்பலும் அதிகார வர்க்கமும் சேர்ந்து சுருட்டிக் கொள்வதற்காகவோ உருவாக்கப்பட்ட திட்டம் போல தெரிகிறது.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே 4,000 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதோடு, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு டாஸ்மாக் சரக்குகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இக்கூடுதல் வரிகள் விதிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, ஜவுளி பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்வதாக அறிவிக்கிறார், ஜெயா. “நினைத்தால் வரி விதிப்பதும், நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவதும் ஜெயாவின் பொழுதுபோக்குசு என இதனை நக்கலடித்தார், கருணாநிதி.
ஒரு பக்கம் இலவசம், இன்னொருபுறம் வரிக் கொள்ளை; நினைத்தால் வரி விதிப்பது, நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவது; வரி விதிப்பு தமிழக அரசு செய்தது; ஆனால், வரி உயர்வை ரத்து செய்தது ஜெயலலிதா என்ற இந்த நடவடிக்கைகள் எல்லாம் நமக்கு துக்ளக் தர்பாரை, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப் போல கோமாளித்தனமான, வக்கிரமான ராஜாவாக ஜெயா ஆட்சி நடத்தி வருவதைதான் எடுத்துக் காட்டுகின்றன.
“தான் பதவியேற்றவுடனேயே சங்கிலி பறிக்கும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாகசு தனக்கேயுரிய மமதையோடு புளுகித் தள்ளினார் ஜெயா. அவர் இப்படிச் சொல்லி வாயை மூடும்முன்பே ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீட்டிற்குள் திருடன் புகுந்து தனது கைவரிசையைக் காட்டிச் சென்றான். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் நடந்துவரும் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் ஜெயாவின் நிர்வாகத் திறமையைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டன. குறிப்பாக, சென்னையில் நடந்த வழக்குரைஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ்குமாரின் கொலை, ஜெயாவின் போலீசு தமிழகத்தின் சட்டம்  ஒழுங்குக்குச் சவால்விட்டிருப்பதைத் தெளிவுபடுத்தியது.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடனேயே பெரும்பாலான டாஸ்மாக் பார்களின் ஏலக் குத்தகை அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு மாறிவிட்டதாகவும், பார்களுக்கான ஏலமே குறிப்பிட்ட சில அ.தி.மு.க. பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்விதத்தில்தான் நடத்தப்பட்டதாகவும், பார்களுக்கான ஏலத்தொகை அடிமாட்டு விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு அ.தி.மு.க. பிரமுகர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதாகவும் ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறது.
மணல் கொள்ளையைப் பொருத்தவரை, “ஆட்சி மாறியது; காட்சி மாறவில்லைசு என்றும் குறிப்பிடுகிறது, ஜெயாவின் விசுவாசியான ஜூ.வி. “கடந்த ஆட்சியில் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியும், தென்மாவட்டத்து காங்கிரசு பிரமுகரான படிக்காசுவும்தான் மணல் விற்பனையில் பெரும் இலாபமடைந்தார்கள். இந்த ஆட்சியிலும் மணல் விற்பனை அவர்களின் கைகளுக்குதான் போயிருக்கிறது. கடந்த ஆட்சியில் இவர்கள் அழகிரியின் நிழல் நபராக இருந்தவருக்கு மாதமொன்றுக்கு 50 இலட்சம் கப்பம் கட்டினார்கள். இப்போது கப்பம் திசை திரும்பி மன்னார்குடிக்குச் செல்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்சு என ஜூ.வி. குறிப்பிடுகிறது. (ஜூ.வி. 31.7.2011, பக்.34)
கல் குவாரி அதிபர்களைக் கோட்டைக்கு வரவழைத்து கப்பம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட பேரம் அம்பலமானதால்தான், தொழில்துறை அமைச்சராக இருந்த சண்முகவேலு ஊரகத் துறைக்கு மாற்றப்பட்டார். இது தவறுக்குக் கிடைத்த தண்டனையல்ல. மாறாக, கப்பத்தை யாரிடம் செலுத்த வேண்டும் என்பது முடிவாகும் முன்பே, சண்முகவேலு பேரத்தைத் தொடங்கி நடத்தியதுதான் பிசகாகிவிட்டது.
சிறுதாவூரில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தனது சொகுசு பங்களாவைக் கட்டியுள்ள ஜெயா; கொடநாட்டில் மக்களின் புழக்கத்திற்குப் பயன்பட்டுவந்த பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டு, உச்ச நீதிமன்றம் அந்தப் பொதுப்பாதையைத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும், அதனை விட்டுத் தர மறுக்கும் ஜெயா, நில அபகரிப்புக்கு எதிராகத் தனி போலீசு பிரிவை உருவாக்கியிருப்பது குரூரமான நகைச்சுவை. இப்போலீசார் 2006 தொடங்கி 2011 முடிய நடந்துள்ள நில ஆக்கிரமிப்புகளை விசாரிப்பார்கள் என வரையறுக்கப்பட்டிருப்பதே, இது தி.மு.க.வை அரசியல்ரீதியாக முடக்குவதற்கான முயற்சி என்பதை அம்பலப்படுத்திவிட்டது.
எனினும், கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டுப் பின் பதவி பறிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டு பல அ.தி.மு.க. பிரமுகர்கள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் போலீசிடம் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கொடுத்த அ.தி.மு.க.வின்  திருவண்ணாமலை  மாவட்டப் பிரதிநிதியான மூர்த்தியை மிரட்டி, அப்புகாரைத் திரும்பப் பெறச் செய்துவிட்டது அ.தி.மு.க. தலைமை. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கொடுத்த புகாரை கடந்த ஆட்சியின்பொழுதே போலீசு வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால், அவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்; அமைச்சர் மீது புகார் கொடுக்க முயன்றுவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்த்  தனலெட்சுமி தம்பதியினர் போலீசாரால் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். இசக்கி சுப்பையா மீது ஏற்கெனவே நில அபகரிப்பு தொடர்பாக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அமைச்சர் பதவி மட்டும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
ஊழலற்ற, யாருடைய தலையீடும் இல்லாத, நேர்மையான ஆட்சியை ஜெயா வழங்குவார் எனப் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம், ஜெயா ஆட்சியைப் பிடித்த மறுநொடியே உடைந்து நொறுங்கிவிட்டது என்பதைத்தான் இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன. தி.மு.க. என்ற கொள்ளைக் கும்பலுக்குப் பதில் அ.தி.மு.க.என்ற கொள்ளைக் கும்பல், மு.க.விற்குப் பதில் ஜெயா, கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்குப் பதில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் என்ற மாற்றத்தைத் தவிர, வேறு எதையும் இந்த ஆட்சி மாற்றம் சாதித்துவிடவில்லை என்பதே உண்மை.
இலவசங்கள் மூலம் மக்களைச் சாதுர்யமாக மயக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் ஆட்சியைதான் மு.க. நடத்திவந்தார். அய்யா போன அதே பாதையில்தான் அம்மாவும் தனது ஆட்சித் தேரை உருட்டிச் செல்கிறார். இது மட்டுமா, ஈழத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினைகளில் மைய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்ற மு.க.வின் தந்திரத்தைதான் ஜெயாவும் பின்பற்றி வருகிறார். தமிழ், தமிழினம், நாத்திகம் என முற்போக்கு வேடம் போடுவார் மு.க. பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிடம் இந்த வேடத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என்பதைத் தவிர, அய்யாவின் ஆட்சிக்கும், அம்மாவின் ஆட்சிக்கும் இடையே அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது.
எனினும், சில விஷயங்களில் அய்யாவைவிட, அம்மா ‘திறமையானவர்’ என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு ஆகிய கிரிமனல் வழக்குகளில் முதல் குற்றவாளியான ஜெயா, சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல்தனமான முறையில் இந்த வழக்குகளின் விசாரணையை 14 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறார். தேர்தல் ஆணையத்திற்குத் தவறான தகவல்களைக் கொடுத்ததற்காக ஜெயா மீது தொடரப்பட்ட வழக்கு, 37ஆவது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றம் தன்னை நெருங்கிவிடாதபடி, தனக்குள்ள சாதி மற்றும் அரசியல் செல்வாக்கு, தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு திறமையாகத் தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறார், பார்ப்பன  பாசிச ஜெயா.
இப்படிபட்ட கிரிமினல் பேர்வழியை, அவர் மாறிவிட்டாரென்றும், பக்குவப்பட்டுவிட்டாரென்றும், திறமையான நிர்வாகியென்றும் ஒளிவட்டம் கட்டி, ஊடகங்கள் மக்கள் முன் நிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறென்ன?
- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011
                

8 ஆக., 2011

அடங்கிடாத பார்ப்பனத் திமிர்!

விடுதலை இராசேந்திரன் 
பார்ப்பனர் அதிகாரம் - ஆதிக்கம் தொடர்ந்து சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு சான்றாக, அண்மையில் நிகழ்ந்து வரும் செய்திகளின் தொகுப்பு:
‘மனுதர்ம சாஸ்திரம்’ என்பது பார்ப்பனர்களுக்கான சட்டம். பிறப்பின்அடிப்படையில், ‘பிராமணர்’, ‘சத்திரியர்’, ‘வைஸ்யர்’, ‘சூத்திரர்’ என்று சமூகத்தைக் கூறு போடுகிறது. இந்த சமூகப் பிளவை உருவாக்கியதே ‘பிரம்மா’தான் என்கிறது. ‘சூத்திரர்கள்’ என்ற கீழ்சாதிக் கூட்டம் ஏனைய பிரிவினருக்கு அடிமை என்று கூறுகிறது. ‘சூத்திரன்’ சொத்து சேர்க்கவோ, கல்வி பெறவோ, திருமணம் செய்து கொள்ளவோ உரிமை இல்லை என்று கூறுவதோடு, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி’க்குப் பிறந்தவர்கள் என்று கூறுகிறது. அதனடிப்படையில் தான் தங்களை “பிராமணர்”களாக இப்போதும் பார்ப்பனர்கள் அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த அடையாளமாக ‘பூணூலை’ காயத்ரி மந்திரம் ஓதி அணிந்து கொள்கிறார்கள்.
இப்படி ஒரு கருத்தையோ, நூலையோ பரப்புவதற்கு எந்த ஒரு நாகரிக சமூகமும் அனுமதிக்காது. ஆனால், இந்த நாட்டில் இன்னும் ‘பூணூலுக்கும்’ தடையில்லை. ‘மனுதர்ம’ நூலுக்கும் தடையில்லை; ‘மனுதர்மத்தின்’ - புதிய புதிய பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். “இந்துக்களைப் புண்படுத்துவதா?” என்று அவ்வப்போது ஓலமிடும் இந்து முன்னணி “சூத்திரர்”களும் - இப்படி ‘இந்து சூத்திரர்களை’ பார்ப்பனர்களின் ‘தாசிப் புத்திரர்கள்’ என்று கூறும், மனுதர்மத்துக்கு எதிராக வாயைத் திறப்பதில்லை. ‘துக்ளக்’ சோ ‘மனுதர்மம்’ உயர்ந்த நெறிகளைக் கொண்டது என்று இப்போதும் தனது ‘துக்ளக்’ பத்திரிகையில் எழுதிக் கொண்டு இருக்கிறார். உலக தத்துவம், ஊழல், ஜனநாயகம், அரசியல் நேர்மை பற்றி எல்லாம் வாயை கிழித்துக் கொண்டு குலைக்கும் பார்ப்பனர்கள், மனுதர்மத்தை இன்றைக்கும் நியாயப்படுத்தியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த, ஜூலை 17-ம் தேதி ‘தினமலர்’ என்ற பார்ப்பன நாளேடு, புத்தக மதிப்புரைப் பகுதியில் ‘மனுதர்ம சாஸ்திரம்’ பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள்.

“சிலர் எண்ணுவதுபோல மனுதர்ம சாஸ்திரம் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்ட நூல் அல்ல. இந்த மனுதர்ம சாஸ்திரம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளான ஈரான் (பாரசீகம்), எகிப்து, பாலஸ்தீனம், கிரேக்கம், பர்மா, மலேயா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பரவி இருந்திருக்கிறது. ஆன்ம ஞானம், மனோதத்துவம், ஒழுக்கவியல், உயிரினங்களின் வாழ்வு, பொருளியல், அரசியல் என்ற மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும், இதே மனுதர்ம சாஸ்திரத்தில் விளக்கப்படுகின்றன. பயனுள்ள நூல்” - என்று என்.சிவராமன் எழுதி, காளிஸ்வரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மனுதர்ம சாஸ்திரத்துக்கு மதிப்புரை எழுதியுள்ளது.

இப்படி மனுதர்மத்தை புதுப்புது பதிப்புகள் போட்டு வெளியிடுவதற்கும்,அதைப் பெருமைப்படுத்தி மதிப்புரை எழுதுவதற்கும், இந்த நாட்டில் சட்டங்கள் அனுமதித்துக் கொண்டிருப்பதைவிட, மானமுள்ள தமிழனுக்கு அவமானம், தலைகுனிவு வேறு ஏதாவது இருக்க முடியுமா?

‘தினமலர்’ ஏட்டைப்போல் “பிராமணர்களின்” அதிகாரபூர்வ அறிவிப்புகள் விளம்பரமாக வெளிவரும் மற்றொரு ஏடு ‘துக்ளக்’. கடந்த ஜூலை 20 ஆம் தேதி வெளிவந்துள்ள ‘துக்ளக்’ ஏட்டில் அனைத்து ‘ப்ராம்மண ஸமூகத்தினரின் நன்மைக்காக வேத பாரதி நடத்தும் பயிலரங்கம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள முழுப் பக்க விளம்பரத்தில் பார்ப்பன குடும்பங்கள் தங்கள் முன்னோர்கள் வழியில், தற்கால சவால்களையும் எதிர்கொண்டு குழந்தைகளையும் தர்மநெறி தவறாமல் வளர்ப்பது பற்றிய “பயிலரங்கம்” ஒன்றை இரண்டு நாள் நடத்தப் போவதாக அந்த விளம்பரம் கூறுகிறது. பார்ப்பன குடும்பங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்று அறிவித்திருக்கிறது.

முன்னோர்கள் காட்டிய வழியில் உழைக்கும் மக்களை ‘சூத்திரர்’களாக தொடர்ந்து நடத்துவது பற்றிய பயிற்சிகளை தருகிறார்களாம். பார்ப்பனக் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே இத்தகைய பயிற்சிகளால் நஞ்சை ஊட்டுகிறார்கள். ‘திராவிடத்தாலேயே’ அழிந்தோம் என்று தொடை தட்டிக் கிளம்பியிருக்கும், ‘வீரதீரசூர’ப் புலிகள் பார்ப்பான் இன்னமும் உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பனத் தினவுக்கு - கொழுப்புக்கு - இறுமாப்புக்கு - என்ன பதில் கூறப் போகிறார்கள்!

உண்மை பெரியார் தொண்டர்களுக்கு பணிகள் அதிகமாகவே காத்திருக்கிறது. மனுதர்மம், பகவத் கீதை, பூணூல்களுக்கு தடை போடக் கோரும் இயக்கத்தைத் தொடங்கியாக வேண்டும். கடைசிப் பூணூல் இருக்கும் வரை ‘கருஞ்சட்டைப்படை ஓயாது’ என்ற ஊர்வலத்தில் முழக்கமிட்டுப் பயன் இல்லை. அதை நாம் செயல்படுத்திக் காட்டவேண்டும்.

கீதை கட்டாயப் பாடமாம்

பார்ப்பனர்களின் மற்றொரு சட்டப் புத்தகம் பகவத்கீதை. ‘பிராமண, வைசிய, சத்திரிய, சூத்திர’ வகுப்புகளை நான்தான் படைத்தேன் (சதுர்வர்ண மயாசிருஷ்டம்) என்று கிருஷ்ணனே கூறுவதாக ‘கீதை’யில் எழுதிக் கொண்டார்கள். இந்த வர்ணபேதங்களை மாற்றக்கூடிய உரிமை தனக்கே கிடையாது என்றும், கீதையில் ‘கிருஷ்ணன்’ கூறிவிட்டான். இந்த பகவத் கீதையை பெரியாரும் - அம்பேத்கரும் கடுமையாக எதிர்த்தார்கள். இந்து மதத்தைக் காப்பாற்ற வந்த விவேகானந்தர்கூட பகவத் கீதையை ஏற்கவில்லை.
இந்த பகவத் கீதையை கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சி, பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கீதையை கட்டாயமாக ஒரு மணி நேரம் கற்றுத் தரவேண்டும் என்று, ஊழலில் நாறிக் கொண்டும் சுரங்க அதிபர்களின் காலை நக்கிக் கொண்டுமிருக்கும் எடியூரப்பா ஆட்சி, கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்மாநில கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே என்ற ‘பார்ப்பனர்’ “கீதையை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்; இந்தியாவில் அவர்களுக்கு இடமில்லை” என்று திமிரோடு பேசியிருக்கிறார். இந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கருநாடக சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தலைவர் முகம்மது இமதியாஸ் தலைமையில் அந்த அமைப்பினர், மாநில ஆளுநர் பரத்வாஜை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அர்ச்சகப் பார்ப்பனத் திமிர்

தமிழ்நாட்டுக் கோயிலகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் இரண்டு முறை தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறிய பிறகும், இன்னும் சட்டத்தை அமுல்படுத்தவிடாமல், தடுத்து நிறுத்தும் சக்தியுள்ளவர்களாகவே பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் இரண்டாவது முறையாக தி.மு.க. ஆட்சி நிறைவேற்றிய சட்டத்துக்கும் தடைபோட்டுவிட்டது. அனைத்து சாதிப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கும் அர்ச்சகருக்கான பயிற்சி தருவதற்கு, திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அரசே பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது. 207 மாணவர்கள் பயிற்சிப் பெற்றனர். பயிற்சி முடித்து 3 ஆண்டுகளாகியும் எந்த ஒரு ‘ஆகம’ கோயிலிலும் ஒரு ‘சூத்திர’ மாணவன்கூட அர்ச்சகர் ஆக முடியவில்லை.
இந்த நிலையில் பயிற்சிப் பெற்ற ‘சூத்திர’ மாணவர்கள், ‘சூத்திர’ இழிவு ஒழிப்புக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள், ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு, பயிற்சி பெற்ற தங்களுக்கான உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகப் பார்ப்பனர்களும் கோயில் நிர்வாகிகளும் அவர்களை இழிவுபடுத்தி, கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கி வருகிறார்கள்.

இதுபற்றி தமிழக அரசுக்கு இந்த மாணவர்கள் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் திருவண்ணாமலை கோயிலில் தங்களுக்கு அர்ச்சகர் பயிற்சி தந்த மய்யம் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி பார்ப்பன அர்ச்சகர்கள் பூட்டுப் போட்டு வைத்திருப்பதையும் பெயர்ப் பலகையை உடைத்துள்ளதோடு தாங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்திய ‘விக்ரகம்’ (கடவுள் சிலை) ‘தீட்டாகி’ விட்டது என்பதால் அதையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்தத் ‘தீண்டாமை’க் குற்றங்களை நேரில் பார்வையிடச் சென்ற அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன் உள்ளிட்டவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் பார்ப்பன அர்ச்சகர்கள் தடுத்து, அடித்து உதைத்து விரட்டியதாக, மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சேதப்படுத்தப்பட்டுள்ள ‘சாமி’ சிலைகள், பயிற்சிப் பள்ளி பெயர்ப்பலகை புகைப்படங்களை ஆதாரத்துடன் ‘டெக்கான் கிரானிக்கல்’, ‘தீக்கதிர்’ நாளேடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

எல்.ஐ.சி.யில் கீதையாம்

இந்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் எல்.அய்.சி. எனும் ஆயுள் காப்பீட்டுக் கழகம், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாயைக் குவித்துத் தந்த நிறுவனம். ‘பொன் முட்டை இடும் வாத்து’ போன்ற இந்த நிறுவனத்தை இந்தியப் பார்ப்பன ஆட்சியே படிப்படியாக சிதைத்து, தனியார் தொழில் நிறுவனங்கள் கொள்ளை அடிக்க வழி திறந்து விட்டது. பார்ப்பன அக்கிரகாரமாகத் திகழும் இந்த எல்.அய்.சி. யில் அவர்கள் இன்னும் ‘வேதகால’ ஆட்சியையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் எல்.அய்.சி. நிறுவனத்தில் அதன் களப் பணியாளர்களுக்காக பயிற்சிகள் தரப்படுகின்றன. இதில் பயிற்சி தருவதற்கு ‘அரே கிருஷ்ணா அரே ராமா’ கும்பலை, எல்.அய்.சி. பார்ப்பன அதிகார வர்க்கம் அழைத்து, கீதையின் பெருமைகளைப் பேச வைத்துள்ளது.
எல்.அய்.சி.க்கும் - அரே கிருஷ்ணா அரே ராமா கும்பலுக்கும் - பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? இன்னும் சொல்லப் போனால், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைக்கே எதிரானது - ‘பகவத் கீதை’. இந்த பூமிப் பந்தில் மனிதர்களின் நீடித்த - நலமான உயிர் வாழ்க்கைக்கு உறுதி தருவது தான் ஆயுள் காப்பீட்டுக் கழகம். மாறாக இப் பூலக வாழ்க்கை நிலையற்றது. மானுட ஜென்மத்துக்கு மரணமில்லை. அது மறுபடியும் ஆத்மாவாக வடிவெடுக்கும் மறு ஜென்மத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்காகவே இந்த உலகில் தர்ம நெறியில் (அதாவது பார்ப்பானுக்கு அடிமையாக) வாழ வேண்டும் என்று ‘உபதேசிப்பதே’ பகவத் கீதை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஆணி வேரான கொள்கைக்கே வேட்டு வைக்கிறார்கள், எல்.அய்.சி. பார்ப்பனர்கள்; இதை கேட்க நாதி இல்லையா?

ராஜபக்சேயின் புரோக்கர் - ‘இந்து’ ராம்

‘இந்து’ நாளேட்டின் ஆசிரியரான பார்ப்பன ராம், சீனாவுக்கும் இலங்கைக்கும் தரகராக’ செயல்பட்டுவரும் நபர். ஈழத் தமிழர் மீது ஜெயவர்த்தனா நடத்திய இனப் படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்டு வரும் கருத்துகளை தனது ஏட்டில் முழுமையாக இருட்டடித்து விடுவார் ‘இந்து’ ராம்! அண்மையில் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகி வரும் ‘சேனல்-4’ தொலைக்காட்சி ஈழத்தின் ‘கொலைக் களங்கள்’ பற்றி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் உலகத்தின் மனசாட்சியையே உலுக்கி விட்டுள்ளது. ஆனாலும் அப்படி ‘சேனல்-4’ ஒளிபரப்பிய கொலைக்கள காட்சி பற்றிய செய்தியை ராம் பார்ப்பான், இருட்டடித்து விட்டார்.
இவ்வளவுக்கும் பிறகு ராஜபக்சே மீது உலக அளவில் உருவாகி வரும் எதிர்ப்புகளிலிருந்து பாதுகாத்து, அவரை கதாநாயகனாக்கிக் காட்டும் முயற்சியில் ‘இந்து’ ராம் இறங்கியுள்ளார். அவசர அவசரமாக கொழும்புக்குப் பறந்து போய் ராஜபக்சேவை நேரில் சந்தித்து அவரது விசேட பேட்டியை வாங்கி, கடந்த ஜூலை 23 ஆம் தேதி தனது ஏட்டின் முதல் பக்கத்திலேயே தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளார். ராஜபக்சே சிரித்துக் கொண்டு காட்சியளிக்கும் பெரிய படத்துடன் தன்னுடைய பெயரிலேயே - ராம், அந்தப் பேட்டியை வெளியிட்டுள்ளார். ராஜபக்சே தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை உருவாக்கி வருவதாக அந்த பேட்டி கூறுகிறது. ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி, தலையில் சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சிகளை ‘சேனல் 4’ தொலைக்காட்சி ஒளிபரப்பியது குறித்தும் ராஜபக்சேவிடம் ‘ராம்’ விளக்கம் கேட்டு வெளியிட்டுள்ளார்.

அய்.நா.வின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்புப் பிரிவின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அது உண்மையான படம் தான் என்று சான்றளிக்கப்பட்ட அந்தக் காட்சிகளை டப்ளின் தீர்ப்பாயம் அங்கீகரித்த அந்த காட்சிகளை, பொய்யான படம் என்று ராஜபக்சே கூறுகிறார். அந்தப் படத்தில் துப்பாக்கியால் சுடுவது விடுதலைப்புலிகள் என்றும், நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லப்படுவது சிங்கள ராணுவத்தினர் என்றும் ராஜபக்சே கேவலமாக ‘புளுகுவதை’ மான வெட்கமின்றி ‘பத்திரிகை தர்மம்’ பேசும், ‘இந்து’ ராம் வெளியிட்டுள்ளார். ராஜபக்சேயும் அவரது ‘தாசர்’ இந்து ராமும் கூறும் பொய்யை சிங்களர்கள்கூட நம்பத் தயாராக இல்லை.

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவே ‘இந்து’ ராமின் பார்ப்பன பொய்க்கு ‘செருப்படி’ தந்திருக்கிறார். மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பால கிருஷ்ணரின் நினைவுப் பேருரையை சந்திரிகா கொழும்பில் ஆற்றியபோது, ‘இலங்கையின் கொலைக்களம்’ வீடியோ காட்சி பற்றிக் கூறுகையில் கண் கலங்கியிருக்கிறார். “இந்த வீடியோ காட்சியை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த எனது 28 வயதான மகன், ‘நான் சிங்களவன் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன், அம்மா’ என்று என்னிடம் அழுதுக் கொண்டே கூறினான். என்னுடய மகளும் அவ்வாறே கூறினாள்” என்று கூறிய சந்திரிகா, அந்தக் கூட்டத்தில் கண்கலங்கி, நாதழுதழுத்து, சற்று நேரம் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார் - என்று ஏடுகளில் செய்திகள் (ஜூலை 25) வெளிவந்துள்ளன.

‘பத்திரிகை தர்மம்’ பேசுகிற பார்ப்பனர் ராம், வழக்கம்போல் இந்த செய்தியையும், தனது ஏட்டில் இருட்டடிப்பு செய்து விட்டார். உலகம் முழுதும் இனப்படு கொலைக்கும், இனவெறிக்கும் இராணுவ அடக்குமுறைக்கும் எதிராக எழுதி - ஏதோ, மனித உரிமைக் காவலன் போல் - இடதுசாரி முகமூடி போட்டுக் கொள்ளும், இந்தப் பார்ப்பனருக்கு ஈழத் தமிழன் என்றால், விடுதலைப்புலிகள இயக்கம் என்றால் ‘பூணூல்’, ‘பஞ்ச கச்ச’ உணர்வுகள் வெளியே கிழித்துக் கொண்டு வந்து நிற்கின்றன; அவ்வளவு பார்ப்பனத் திமிர்!

7 ஆக., 2011

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.
ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.
வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.
ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.
···
அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி “இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி” என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.
ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான “அஹ்பே ஹதீஸ்’ இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.
2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்” என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.
சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?
நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.
···
ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் “தீவிரவாதிகளின் குடும்பம்’ என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.
நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; “குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்” என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.
செப் 2001ல் “சிமி’ தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் “சிமி’ உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் “சிமி’ தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் “அரசை எதிர்த்துப் பேசினார்’ என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.
அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.
யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், “அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்’, தாங்கள் “சிமி’ உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.
அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.
மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: “எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.”
···
அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.
மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே “இவர் சிமி உறுப்பினர்’ என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது “சிமி’ யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.
முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் “சிமி’க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; “இந்துஸ்தான் டைம்ஸூ’க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.
···
அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.
இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். “பாண்டே’ கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.
ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் “சிமி’யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த “புனிதப் போராளி’ (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.
ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: “இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?”
குவாஸ்மி “சிமி’ உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.
தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: “நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.”
குப்பண்ணன்,  புதிய கலாச்சாரம் அக்டோபர் 2008

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி