படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

20 பிப்., 2012

படித்ததில் மனது வெந்தது !!!

இது ஒரு மனித காட்சி சாலை...!
தாய்பால் குடித்த "மிருகங்கள்" எப்போதாவது வந்து போகும் இடம்.

"
முதியோர்கள்" நம் இல்லத்தில் தான் இருக்க வேண்டும்.
"முதியோர் இல்லத்தில்" அல்ல....


பெற்ற மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்! மதுரையில் சம்பவம்!!

 


மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில்நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர்,மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் எனபலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல்ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால்சந்தேகப்பட்ட சிலர்அவரை நெருங்கினர்.
அப்போது அவர்மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப, "108'ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், "காயம் இல்லாததால்அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாதுஎனக்கூறிதிரும்பிச் சென்றனர்
பின்போலீசாருக்கு தகவல் தெரிவித்துஅவர்கள் வந்ததும்மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார்அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர்.
அதுவரை வாய் திறக்காதவர்பேசத் தொடங்கினார். ""எனக்கு உணவே வேண்டாம்தயவு செய்து என்னை விடுங்க...'' என,அழுதார். ""மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.
எனக்கு ஒரு மகள்மகன் . சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்துதிருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன்.
ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னை,யாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால்அங்கிருந்து பஸ் ஏறினேன்.
15 நாட்களுக்கு முன்மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்துஉணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின்,பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.
காதில் தங்கத்தோடு இருந்தாலும்அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால்,உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,'' எனஅழ துவங்கினார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து,மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
http://adiraifact.blogspot.in/2012/01/blog-post_9953.html

மோடி வித்தை’ - மதவெறியின் தேர்தல் முகம்


நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பைச் சார்ந்த டீஸ்டா செடல்வாடுடன் நேர்காணல்
டீஸ்டா செடல்வாட் தனது நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் மூலமாக குஜராத்தில் 2002 ஆம் ஆண்டின் கலவரங்களில் பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான போராட்டத்தில் முன்னணியில் இருந்து வருகிறார். அந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதிக்கும் வேறு பல பிரச்சனைகளுக்காகவும் அவர் விரிவாகப் பணியாற்றி வருகிறார்.
சங் பரிவார், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி தனது இந்துத்துவா கொள்கை குறித்த கடும் போக்கை கைவிட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் அதன் நிகழ்ச்சி நிரல், குறிப்பாகக் குஜராத்தில் இன்னும் மிகவும் உயிரோட்டமாகத் தானே இருக்கிறது?
சங் பரிவார் அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரல்களும் அதன் பாராளுமன்ற முகமான பாரதிய ஜனதாக் கட்சியும் அவ்வப்போது, அரசியல் அமைப்பு நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் அழுத்தங்கள் மற்றும் கண்டனங்கள் காரணமாக, ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோற்றமளிகின்றன. அவை தேர்தல் ரீதியாக தமக்கு பொருத்தமாகத் தோன்றுகிறபோதெல்லாம் தமது பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலை கைவிடுவது போல் தோற்றமளிக்கின்றன- உத்தரப் பிரதேசத்தில் அவர்கள் எவ்வாறு மாறியிருக்கின்றனர் என்பதைக் காண்க‍ ஆனால் அவை உண்மையில், தேர்தல் லாபங்களை அறுவடை செய்து கொடுத்த பாதையை இப்போது வரையிலும் கைவிடவில்லை.
பெரும்பான்மை வாதம் அல்லது பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவது (1984 சீக்கியர் படுகொலைக்குப் பிறகு காங்கிரசு கூட இதைச் செய்தது) நடந்தது. இப்போது குஜராத்திலோ அல்லது வேறு எங்கிலுமோ அவை இந்த அடிப்படைப் பிரித்தாளும் முறையைச் செய்து வருகிறார்கள், இது தான் உண்மை நிலையாக இருக்கிறது. “இந்து கோபம்”, “இந்து சீற்றம்”, “இந்துத் தண்டனை” ஆகியவற்றை எல்லா நேரத்திலும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அது சலிப்படையச் செய்யும், வேறு எதுவும் இல்லையென்றால், பிறகு வேறு என்ன தான் செய்வது?
சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, ஜனநாயக நிர்வாகத்தின் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவி பெரும் தேர்தல் ஆதாயத்தை பெற்றுக்கொண்டு, காவலர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகளையும் கூட உங்கள் அரசியல் அமைப்பு விரோத உலகக் கண்ணோட்டத்திற்கு ஆட்பட வைத்துக்கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைத்து மக்களுக்குமான சம உரிமைகள் என்பவை அனைத்து இந்தியர்களுக்குமான கேள்விக்கிடமற்ற பிறப்புரிமை என்பதை நம்புவதில்லை.
அவர்களுடைய நிகழ்ச்சிநிரலை இவ்விதமாக சூழ்ச்சிகரமாக மேற்கொண்டு வருவது குறித்து குஜராத்தில் விரிவாக வேலை செய்துவருகிற ஒருவராக உங்கள் கருத்து என்ன? அவரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த கடும்போக்கான காவி அரசியலிடமிருந்து மோடி ஏன் தன்னை தொலைவில் நிறுத்திக் கொள்கிறார்?
குஜராத் ஒரு சிறப்பு ஆய்வுக் களம் ஆகும். அந்தப் பகுதிக்கு ஒரு செழுமையான பன்மைவாதக் கடந்த காலம் இருக்கிறது. அது 1960களின் மத்தியிலிருந்து முரண்பாடற்ற வகையில் செயல்பட்டு வருகிறது. குஜராத்தைப் பற்றி நாம் பேசும்போது கவிஞர் நர்மதுவின் உள்ளடங்கிய மற்றும் தொலைநோக்குப் படைப்புக்கள் நினைவுக்கு வருகின்றன. மேலும் உருதுக் கவிஞரான வாலி குஜராத்தி, அலைந்து திரிந்து கடைசியில் குஜராத்தைத் தான் தனது தங்குமிடமாகக் கொண்டார். அகமதாபாத்தில் 2002ல் மூன்று மாதங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த கொள்ளைக் கும்பலால் திருட்டுத்தனமாக அவரது தர்க்கா பிப்ரவரி 28 அன்று இரவு இடித்துத் தள்ளப்பட்டது. (அது காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே வின் அலுவலகத்திற்கு மிக அருகில் இருந்தது.) இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புக்களின் வெற்றியை எடுத்துக் காட்டுகிறது.
இன்று மோடி புதிய தோற்றத்தை வெளிப்படுத்த செய்யும் முயற்சி மேலோட்டமானது தான்- இசுலாமிய இளைஞர்களுக்கான பிரதமர் உதவித்தொகை ரூ.10,000 கோடி எவ்விதம் திருப்பி அனுப்பப்பட்டது என்பதிலிருந்து நீங்கள் இதை அறிந்து கொள்ளலாம். குற்றச் செயல்களைக் கையாள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள மாநில் அரசு வழக்குரைஞர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள்? குஜராத்தில் 4000 வழக்கறிஞர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர். அரசு வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் ஆகியோர் நியமனங்களில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா?
பல நகரங்களில் சிறுபான்மையினரைப் பிரித்து வைப்பது மோசமாக உள்ளது- 2002க்கு முன்பே கூட அது இருந்துள்ளது, இப்போது அது மிகமோசமாக வளர்ந்துள்ளது, அவ்வளவு தான்- மேலும் சில பள்ளிகளில் முஸ்லிம் மற்றும் கிறித்தவ மாணவர்களுக்கு அனுமதியே கிடைப்பதில்லை. பிரிவினைப் பாதை அனைவரையும் பாதிக்கிறது என்ற எண்ணம் இப்போது பல குஜராத்தியர்களிடம் இருக்கிறது.
அகமதாபாத், வடோதரா அல்லது சூரத்தில் அபூர்வமாகப் பேசப்படும் ஒன்று- ஊடகம் கூட வழக்கமான கதையைப் பிரசுரிப்பதை விட அமைதியாக இருந்து விடுகிறது- இந்த நகரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நிகழ்வதாகும். கீதங்களின் இசை இரவுக் காற்றில் வெளியே கசிந்து செல்லாத வண்ணம் தேவாலயங்களின் கதவுகள் மூடிவைக்கப்பட வேண்டியிருந்தன.
விளிம்பு நிலை மக்களிடம் பணியாற்றிவரும் கிறித்தவ அறக்கட்டளைகளை குறிவைத்துத் தாக்குவதும் ஆவணப்படுத்தப்படுவதில்லை. அன்றாட துன்புறுத்தலும் பணம்பறிப்பதும் நடந்து வருகின்றன. ஊடகம் பற்றிய மிகச் சோகமான உண்மை என்னவென்றால் இந்த அன்றாட வக்கிரம் சகித்துக் கொள்ளப்படவேண்டியதாக ஆகிவிட்டது தான்.
கலவரப் பகுதிகள்( குஜராத் அசையாச் சொத்துக்களை மாற்றுவதற்கான தடை மற்றும் வளாகங்களிலிருந்து வாடகைதாரர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுத்துப் பாதுகாக்கும் விதிமுறைகள்) சட்டம், தோற்றத்தில் பிரிவினையைத் தடுப்பதாக இருந்தாலும் நடைமுறையில் அது பிரிவினையை ஊக்குவிக்கிறது. இது பற்றி சிறிது கூற முடியுமா? கலவரங்களுக்குப் பிறகு துன்பத்தினால் விற்றுவிட்டு செல்வதைத் தடுக்கும் வகையில் அது திருத்தப்பட்டதாக கூறப்பட்டதே.
இது ஒரு விந்தையான சட்ட உருவாக்கம் ஆகும், அது உண்மையில் தலித் பாதாக்கள், முஸ்லிம் பஸ்திக்கள் மற்றும் பிறரின் இறுக்கமான வகுப்புவாதப் பிரிவினைகளை அடிப்படையில் பாதுகாப்பதாகும். இவர்களுக்கிடையில் சிறு எண்ணிக்கையில் கிறித்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சட்டம் உண்மையில் துன்பச் சூழலில் விற்பதைத் தவிர்ப்பது என்ற பெயரில் வகுப்புக்களுக்கிடையிலான விற்பனையைத் தீவிரமாகத் தடுப்பதைப் பாதுகாத்துள்ளது.
மோடி அரசாங்கம் சிறுபான்மையினரை, குறிப்பாக கிறித்தவர்களை குறிவைத்து மதமாற்றச் சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா?
ஆம், “மத சுதந்திர சட்டம்” என்று முரண் நகையாக அழைக்கப்படும் ஒரு சட்டத்தை குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்கள் கொண்டுவந்துள்ளன. அச்சட்டம் உண்மையில் ஒவ்வொரு இந்தியனுக்கும் தனது சொந்த நம்பிக்கையை போதிப்பதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் சட்டப் பிரிவு 25ன் கீழ் உள்ள உரிமையைத் தடை செய்கிறது. இச்சட்டங்கள் உள்ளார்ந்த வகையில் அரசியல் சட்டத்திற்கு எதிரானவை என்று நான் நம்புகிறேன்.
குஜராத்தில் வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி உங்கள் கருத்து. 
மிகவும் சரி. பின்வரும் புள்ளி விவரங்களைப் பாருங்கள். குஜராத்தில் உள்ள முஸ்லிம்களில் 26 விழுக்காட்டினர் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை எட்டிப் பிடிக்கின்றனர். இதில் ஒட்டு மொத்த விழுக்காடு 46 ஆகும். பள்ளிகளில் சேர்க்கப்படும் ஒட்டுமொத்த மாணவர் விழுக்காடு 79 ஆக இருக்கும்போது இதில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 75 விழுக்காடு மட்டுமே. குஜராத்தில் முஸ்லிம்களில் நகர்ப்புற வறுமையில் இருப்போர் உயர்சாதி இந்துக்களின் எண்ணிக்கையை விட 800 மடங்கும் பிற பிற்பட்ட சாதியினரின் எண்ணிக்கையை விட 50 மடங்கும் மிகுதியாக உள்ளன. அந்த மாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் 12 விழுக்காடு மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியவை, அதிலும் 2.6 விழுக்காட்டினருக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது.
எல்லாவற்றையும் விட குஜராத்தில் மோசமான பட்டினியும் சத்துப் பற்றாக்குறையும் மிகுந்திருக்கிறது. குஜராத்தில் 1999ல் பெண்களிடையேயும் குழந்தைகளிடையேயும் 46.3 விழுக்காடாக இருந்த ரத்த சோகை நோய் 2004ல் 55 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது- இது தான் அதிரும் குஜராத்தில் நடப்பதாகும். 1974க்கும் 2008க்கும் இடையில் குஜராத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு (GDP) தேசிய அளவில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடப்படும் போது மாறவே இல்லை.
மைய அரசின், அரசியல் சட்ட ரீதியான அமைப்புக்களின், செயலற்ற தன்மை தான் துயரமளிப்பதாக இருக்கிறது. 2002லிருந்து மீட்பு, மறுவாழ்வு போன்றவற்றில் செயல்படாக் குற்றத்தை இழைத்திருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதன் ஆண்டறிக்கைகளில் குறிப்பிட்டுள்ள போதிலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் கூட முஸ்லிம் இளைஞர்களுக்கான கல்வி உதவித் தொகை நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த பிரச்சனையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேசியப் பெண்கள் ஆணையம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆகியவை குஜராத் பெண்கள், குழந்தைகளிடையே பட்டினியும் ரத்த சோகை நோயும் அதிகரித்து வருவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏன்?
சச்சார் குழு அறிக்கை முன்வைத்துள்ளது போல சம வாய்ப்புக்களுக்கான ஆணையம் ஓன்று இருக்குமானால், அது ஊக்குவிப்பும் சுதந்திரமும் கொண்டதாக இருக்குமானால், பாகுபாட்டைச் சுட்டிக்காட்டும் இந்தப் பிரச்சனைகள் சரிசெய்யபடலாம்.
இந்த விளிம்புநிலை சமூகத்திற்கு என்னதான் வழி?
ஒவ்வொரு வழியிலும் இந்தப் பாகுபாட்டிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதும் நீதிமன்றங்களில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றிடம் மனுக்கள் தாக்கல் செய்து, இந்த புறகணிப்பு குறித்து அங்கீகரிக்கச் செய்து தீர்வு காண்பதும் தான் ஒரே வழி. சமுதாய அமைப்புக்கள் உதவி வழங்குவது மிகவும் நல்லது தான், ஆனால் இந்திய அரசும் குஜராத் அரசும் என்ன செய்யப் போகின்றன?
தலித்துக்களானாலும் கிறித்தவர்கள் ஆனாலும் முஸ்லிம்கள் ஆனாலும் அனைத்துக் குடிமக்களுக்கும் அரசியல் சாசனக் கடமையும் பொறுப்பும் அவற்றுக்கு இல்லையா? வீட்டுக் கடன்கள், வங்கிக் கடன்கள்.. இன்ன பிறவற்றில் பாகுபாடு காட்டும் துறைகள் எவை என்பதை நாம் கூட்டாகச் சேர்ந்து கண்டறிய வேண்டும்... பள்ளிகளில் சேர்க்கை, உயர் கல்வியில் சேர்க்கை ஆகியவற்றில் இதை வெளிக் கொண்டுவருவதில் ஊடகங்கள் ஒரு பங்கினை வகிக்க வேண்டியிருக்கிறது.
பொது உணர்வில் தீங்கு விளைவிக்கும் “நாம்”, “அவர்கள்” என்ற பிளவுபடுத்துதல், அரசியல் எதிர்ப்பில் கூட தற்காப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உணமையான பிரச்சனையாகும். அரசியல் வர்க்கம் செயல் வீரத்திற்கு ஆதரவான, ஏழைகளுக்கு ஆதரவான, விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகள் மூலம், சிறுமிகள், பெண்கள், தலித்துக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு அடிப்படை வசதிகளான வீட்டு வசதி மற்றும் கல்வி உரிமைகள் மறுக்கப்படுவது குறித்த பிரச்சனைகளை முன்னெடுக்க வேண்டும்.
அரசியல் எதிர்ப்பு என்று நான் குறிப்பிடுகையில், நான் காங்கிரசைக் குறிப்பிடுகிறேன். ஆனால் பிற தேசிய மதச் சார்பற்ற கட்சிகளின் பங்கு என்ன? அவர்களும் கூட இங்கு பிரச்சாரத்தை மேற்கொண்டு, கிளர்ச்சிகளைக் கட்டமைத்து, பொதுமக்களின் கருத்தை உருவாக்கி அதிகரிக்கச் செய்து உதவலாம். அனைத்திந்திய ஜனநாயக மாதர் பேரவை, இ.பொ.க., இ.பொ.க.(மா) போன்றவை கிளர்ச்சிகள் செய்த காலம் ஒன்று இருந்தது, ஆனல இப்போது அவை இருக்கும் இடம் தெரியவில்லை.
அமைதி மற்றும் ஒற்றுமைக்கான சத்பவன இயக்கம் குறித்து உங்கள் கருத்து.
அது அந்தச் சொல்லுக்கான அவமரியாதை ஆகும். வரி செலுத்துவோரின் உழைப்பால் வந்த பணத்தை வீண‌டிப்பதாகும். மோடியை மட்டுமல்லாது, (2002ல் கட்சிக்குள் மோடியின் அரசியல் வாழ்வை மீட்டுத் தந்த) (அருண்) ஜெட்லிக்கள் மற்றும் பா.ஜ.க.வின் பிற தேசியத் தலைவர்களைக் கேளுங்கள், அவர்கள் கோத்ராவுக்குப் பிந்தைய அடக்குமுறைக் கொலைகளின் நிகழ்ச்சிப் போக்கை சந்தேகத்துக்கிடமற்ற வகையில் கண்டிக்கிறார்களா? நம்மில் ஒவ்வொருவரும், மதச்சார்பற்ற குழுக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள் அனைவருமே கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வைக் கண்டித்தோம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க./ விஸ்வ ஹிந்து பரிசத் ஆகியவை கோத்ராவுக்குப் பழிவாங்கும் வகையில் பெருந்திரள் பச்சைப் படுகொலைகளையும் பட்டப்பகல் பாலியல் வன்முறைகளையும் கண்டிப்பதில் ஏன் தயக்கம் காட்டுகின்றன? ஏனென்றால் படுகொலை மற்றும் வெறுப்பு ஆகியவற்றைச் சார்ந்திருப்பதன் லாபங்களை அரசியல் ரீதியாக எங்கோ தாம் அறுவடை செய்துள்ளதை அவர்கள் அறிவார்கள்.
- அனுபமா கடகம்.
தமிழில்: வெண்மணி அரிநரன்
நன்றி : கீற்று

20 ஜன., 2012

நமது மீடியாக்களின் வண்டவாளங்கள்



ஊடகங்களை விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார் உண்மை வார்த்தைகள் மூலம்..! நீதிபதி மார்கண்டேய கட்ஜு.


நமது மீடியா மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை செய்கிறது. பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா.


சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.




மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.




முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.




அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா.




உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’ என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம்.




அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம். பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக் தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள். :நீதிபதி மார்கண்டேய கட்ஜு


புதுடெல்லி : பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.


அந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:


= கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?


மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.


= கரன் தாப்பர்: உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?


மார்கண்டேய கட்ஜு: நிச்சயமாக இல்லை.


= கரன் தாப்பர்: உண்மையாகவா சொல்கிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.


= கரன் தாப்பர்: உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?


மார்கண்டேய கட்ஜு: ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.


இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது.


நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.


= கரன் தாப்பர்: இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?


மார்கண்டேய கட்ஜு: இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள்.


‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.


= கரன் தாப்பர்: அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?


மார்கண்டேய கட்ஜு: இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன்.


மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம்.
முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது.


இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.


அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா.


சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.


= கரன் தாப்பர்: ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை பொருள் & ஓப்பியம் & மாதிரி.


ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று.


இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம்.


நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.


= கரன் தாப்பர்: மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?


மார்கண்டேய கட்ஜு: இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.


இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது?


ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.


அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.


யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?


முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.


எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.


= கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?


மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.


= கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?


= கரன் தாப்பர்: மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்கு மூன்றாவது உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும்.


அதற்கு மீடியா உதவ வேண்டும்.


ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது?


அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா.


ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள்.


அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா?


ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது.


பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது.


இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!


= கரன் தாப்பர்: ஆக, மீடியா என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள். தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?


மார்கண்டேய கட்ஜு: ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும்.


ஏனென்றால் மீடியா என்பது ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் சாதாரணமான பிசினஸ் கிடையாது.


அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி மீடியாவுக்கு தரப்பட்டிருக்கிறது.


அந்த பொறுப்பை அது செய்ய தவறினால் நாட்டை மக்களை கைவிட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?


= கரன் தாப்பர்: இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்துகொண்டு ‘இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி‘ என கதை அளந்துகொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.


= கரன் தாப்பர்: ‘செய்தியை சரியாக சொல்வதில்லை; உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: அதேதான் என் கருத்தும்.


2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரை பார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாக செய்தி போடுகிறோம்‘ என்று பேரம் பேசினார்கள். அதை பார்த்து பத்திரிகை உரிமையளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது.


‘நாம்தான் சம்பளம் கொடுக்கிறோமே, செய்தியாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?‘ என்று முடிவு செய்து, ‘ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்‘ என்று டீல் போடுகிறார்கள்.


ஒரு பத்திரிகையில் ‘‘வேட்பாளர் ‘ஏ‘ அமோக வெற்றி பெறுவார்‘‘ என்ற செய்தி மேலே; ‘‘அவருக்கு டெபாசிட் போய்விடும், ‘பி‘தான் ஜெயிப்பார்‘‘ என்று கீழே முதல்பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம்.


கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.


= கரன் தாப்பர்: இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்...


மார்கண்டேய கட்ஜு: அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லையே.


நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து ‘லேடி காகா வந்துவிட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்..’


இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?


= கரன் தாப்பர்: மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.


= கரன் தாப்பர்: அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?


மார்கண்டேய கட்ஜு: பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும்.


பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.


சொல்லி திருந்தாத மீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது;


லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.


= கரன் தாப்பர்: அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?


மார்கண்டேய கட்ஜு: ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும் எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.


= கரன் தாப்பர்: மீடியாவை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே?


மார்கண்டேய கட்ஜு: நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாகாரர்களும் இருக்கிறார்கள்.


உதாரணமாக சாய்நாத்தை சொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு.


பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக் தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள்.
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி